LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

திரிகடுகம்

 

கடவுள் வாழ்த்து
கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும்
பூவைப் பூ வண்ணன் அடி.
நூல்
அருந்ததிக் கற்பினார் தோளும், திருந்திய
தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும், சொல்லின்
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும், - இம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து. 1
தன் குணம் குன்றாத் தகைமையும், தா இல் சீர்
இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின்
நான்மறையாளர் வழிச் செலவும், - இம் மூன்றும்
மேல் முறையாளர் தொழில். 2
கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், - இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு. 3
பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற
பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக்
காய்வானைக் கை வாங்கிக் கோடலும், - இம் மூன்றும்
சாவ உறுவான் தொழில். 4
வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப
வீழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலும், - இம் மூன்றும்
அருந் துயரம் காட்டும் நெறி. 5
பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு. 6
வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்
செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும், - இம் மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா. 7
தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்த
நல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்து
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும், - இம் மூன்றும்
தாம் தம்மைக் கூறாப் பொருள். 8
பெருமை உடையார் இனத்தின் அகறல்,
உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,
விழுமிய அல்ல துணிதல், - இம் மூன்றும்
முழு மக்கள் காதலவை. 9
கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக் களனும், பாத்து உண்ணாத்
தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும்
நன்மை பயத்தல் இல. 10
விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்
களியாதான் காவாது உரையும், தெளியாதான்
கூரையுள் பல் காலும் சேறலும், - இம் மூன்றும்
ஊர் எலாம் நோவது உடைத்து. 11
தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்;
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்;
கோளாளன் என்பான் மறவாதான்; - இம் மூவர்
கேள் ஆக வாழ்தல் இனிது. 12
சீலம் அறிவான் இளங்கிளை; சாலக்
குடி ஓம்ப வல்லான் அரசன்; வடு இன்றி
மாண்ட குணத்தான் தவசி; - என மூவர்
யாண்டும் பெறற்கு அரியார். 13
இழுக்கல் இயல்பிற்று, இளமை; பழித்தவை
சொல்லுதல் வற்றாகும், பேதைமை; யாண்டும்
செறுவோடு நிற்கும், சிறுமை; - இம் மூன்றும்
குறுகார், அறிவுடையார். 14
பொய் வழங்கி வாழும் பொறியறையும், கை திரிந்து
தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும், ஊழினால்
ஒட்டி வினை நலம் பார்ப்பானும், - இம் மூவர்
நட்கப் படாஅதவர். 15
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க்
கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர்
சாவா உடம்பு எய்தினார். 16
மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும், கற்புடையாள்
பூப்பின்கண் சாராத் தலைமகனும், வாய்ப் பகையுள்
சொல் வென்றி வேண்டும் இலிங்கியும், - இம் மூவர்
கல்விப் புணை கைவிட்டார். 17
ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும், புணர்ந்தார்க்கு
இரு தலையும் இன்னாப் பிரிவும், உருவினை
உள் உருக்கித் தின்னும் பெரும் பிணியும், - இம் மூன்றும்
கள்வரின் அஞ்சப்படும். 18
கொல் யானைக்கு ஓடும் குணமிலியும், எல்லில்
பிறன் கடை நிற்று ஒழுகுவானும், மறம் தெரியாது
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும், - இம் மூவர்,
நாடுங்கால், தூங்குபவர். 19
ஆசை பிறன்கண் படுதலும், பாசம்
பசிப்ப மடியைக் கொளலும், கதித்து ஒருவன்
கல்லான் என்று எள்ளப்படுதலும், - இம் மூன்றும்
எல்லார்க்கும் இன்னாதன. 20
வருவாயுள் கால் வழங்கி வாழ்தல், செரு வாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை, எய்தப்
பல நாடி நல்லவை கற்றல், - இம் மூன்றும்
நல மாட்சி நல்லவர் கோள். 21
பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும்
பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப்
பொய்த்துரை என்னும் புகை இருளும், - இம் மூன்றும்
வித்து; அற, வீடும் பிறப்பு. 22
தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தால்
குற்றம் கடிந்த ஒழுக்கமும், தெற்றெனப்
பல் பொருள் நீங்கிய சிந்தையும், - இம் மூன்றும்
நல் வினை ஆர்க்கும் கயிறு. 23
காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொல்லும்,
தூண்டிலினுள் உட்பொதிந்த தேரையும், மாண்ட சீர்,
காழ்ந்த பகைவர் வணக்கமும், - இம் மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும், அளறு. 24
செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்து அகன்ற
அல்குல் விலை பகரும் ஆய்தொடியும், நல்லவர்க்கு
வைத்த அறப்புறம் கொண்டானும், - இம் மூவர்
கைத்து உண்ணார், கற்றறிந்தார். 25
ஒல்வது அறியும் விருந்தினனும், ஆர் உயிரைக்
கொல்வது இடை நீக்கி வாழ்வானும், வல்லிதின்
சீலம் இனிது உடைய ஆசானும், - இம் மூவர்
ஞாலம் எனப் படுவார். 26
உண் பொழுது நீராடி உண்டலும், என் பெறினும்
பால் பற்றிச் சொல்லா விடுதலும் தோல் வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை, - இம் மூன்றும்
தூஉயம் என்பார் தொழில். 27
வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும்,
இல்லது காமுற்று இருப்பானும், கல்விச்
செவிக் குற்றம் பார்த்திருப்பானும், - இம் மூவர்
உமிக் குற்றுக் கை வருத்துவார். 28
பெண் விழைந்து பின் செலினும், தன் செலவில் குண்றாமை;
கண் விழைந்து கையுறினும், காதல் பொருட்கு இன்மை;
மண் விழைந்து வாழ் நாள் மதியாமை; - இம் மூன்றும்
நுண் விழைந்த நூலவர் நோக்கு. 29
தன் நச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும்,
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்,
என்றும் அழுக்காறு இகந்தானும், - இம் மூவர்
நின்ற புகழ் உடையார். 30
பல்லவையுள் நல்லவை கற்றலும், பாத்து உண்டு ஆங்
இல்லறம் முட்டாது இயற்றலும், வல்லிதின்
தாளின் ஒரு பொருள் ஆக்கலும், - இம் மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை. 31
நுண் மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா
வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல் மொழியைச்
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும், - இம் மூன்றும் 
கற்றறிந்தார் பூண்ட கடன். 32
கோல் அஞ்சி வாழும் குடியும், குடி தழீஇ
ஆலம் வீழ் போலும் அமைச்சனும், வேலின்
கடை மணி போல் திண்ணியான் காப்பும், - இம் மூன்றும்
படை வேந்தன் பற்று விடல்! 33
மூன்று கடன் கழித்த பார்ப்பானும், ஓர்ந்து
முறை நிலை கோடா அரசும், சிறைநின்று
அலவலை அல்லாக் குடியும், - இம் மூவர்
உலகம் எனப்படுவார். 34
முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும்,
நுண் நூல் பெருங் கேள்வி நூல் கரை கண்டானும்,
மைந் நீர்மை மேல் இன்றி மயல் அறுப்பான், - இம் மூவர்
மெய்ந் நீர்மைமேல் நிற்பவர். 35
ஊன் உண்டு, 'உயிர்கட்கு அருளுடையெம்!' என்பானும்,
'தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும்' என்பானும்,
காமுறு வேள்வியில் கொல்வானும், - இம் மூவர்
தாம் அறிவர், தாம் கண்டவாறு. 36
குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய
சால் பினில் தோன்றும், குடிமையும்; பால் போலும்
தூய்மையுள் தோன்றும் பிரமாணம்; - இம் மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு. 37
தன்னை வியந்து தருக்கலும் தாழ்வு இன்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும், முன்னிய
பல் பொருள் வெஃகுஞ் சிறுமையும், - இம் மூன்றும்
செல்வம் உடைக்கும் படை. 38
புலை மயக்கம் வேண்டி பொருட்பெண்டிர்த் தோய்தல்,
கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்து
பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல், - இம் மூன்றும்
நன்மை இலாளர் தொழில். 39
வெகுளி நுணுக்கம் விறலும் மகளிர்கட்கு
ஒத்த ஒழுக்கம் உடைமையும், பாத்து உண்ணும்
நல் அறிவாண்மை தலைப்படலும், - இம் மூன்றும்
தொல் அறிவாளர் தொழில். 40
அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும், துளங்கினும்
தன் குடிமை குன்றாத் தகைமையும், அன்பு ஓடி
நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும், - இம் மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை. 41
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை,
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல், ஒழுகல்,
உழவின்கண் காமுற்று வாழ்தல், - இம் மூன்றும்
அழகு என்ப வேளாண் குடிக்கு. 42
வாயின் அடங்குதல் துப்புரவு ஆம்; மாசு அற்ற
செய்கை அடங்குதல் திப்பியம் ஆம்; பொய் இன்றி
நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும்; - இம் மூன்றும்
வஞ்சத்தின் தீர்ந்த பொருள். 43
விருந்து இன்றி உண்ட பகலும் திருந்திழையார்
புல்லப் புடை பெயராக் கங்குலும், இல்லார்க்கு ஒன்று
ஈயாது ஒழிந்தகன்ற காலையும், - இம் மூன்றும்
நோயே, உரன் உடையார்க்கு. 44
ஆற்றானை, 'ஆற்று' என்று அலைப்பானும்; அன்பு இன்றி,
ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும், கூற்றம்
வரவு உண்மை சிந்தியாதானும்; - இம் மூவர்
நிரயத்துச் சென்று வீழ்வார். 45
கால்தூய்மை இல்லாக் கலி மாவும், காழ் கடிந்து
மேல் தூய்மை இல்லாத வெங் களிறும், சீறிக்
கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி, - இம் மூன்றும்
குறுகார், அறிவுடையார். 46
சில் சொல், பெருந் தோள், மகளிரும்; பல் வகையும்
தாளினால் தந்த விழு நிதியும்; நாள்தொறும்
நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும்; - இம் மூன்றும் 
காப்பு இகழல் ஆகாப் பொருள். 47
வைததனை இன் சொல்லாக் கொள்வானும், நெய் பெய்த
சோறு என்று கூழை மதிப்பானும், ஊறிய
கைப்பதனைக் கட்டி என்று உண்பானும், - இம் மூவர்
மெய்ப் பொருள் கண்டு வாழ்வார். 48
ஏவியது மாற்றும் இளங் கிளையும், காவாது
வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய் தெள்ளி
அம் மனை தேய்க்கும் மனையாளும், - இம் மூவர்
இம்மைக்கு உறுதி இலார். 49
கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும்
உள் பொருள் சொல்லாச் சல மொழி மாந்தரும்,
இல் இருந்து எல்லை கடப்பாளும், - இம் மூவர்
வல்லே மழை அருக்கும் கோள். 50
தூர்ந்து ஒழுகிக்கண்ணும், துணைகள் துணைகளே;
சார்ந்து ஒழுகிக்கண்ணும், சலவர் சலவரே;
ஈர்ந்த கல் இன்னார் கயவர்; - இவர் மூவர்,
தேர்ந்தக்கால், தோன்றும் பொருள். 51
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்; காமுற்ற
பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை; நண்ணும்
மறுமைக்கு அணிகலம் கல்வி; - இம் மூன்றும்
குறியுடையோர்கண்ணே உள. 52
குருடன் மனையாள் அழகும், இருள் தீரக்
கற்று அறிவில்லான் கதழ்ந்துரையும், பற்றிய
பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும், - இம் மூன்றும்
எண்ணின், தெரியாப் பொருள். 53
தன் பயம் தூக்காரைச் சார்தலும், தான் பயவா
நன் பயம் காய்வின்கண் கூறலும், பின் பயவாக்
குற்றம் பிறர் மேல் உரைத்தலும், - இம் மூன்றும்
தெற்றெனவு இல்லார் தொழில். 54
அரு மறை காவாத நட்பும், பெருமையை
வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும், யாண்டானும்
செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும், - இம் மூவர்
ஒன்றாள் எனப்படுவார். 55
முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து, பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு, வந்த
ஒழுக்கம் பெரு நெறி சேர்தல், - இம் மூன்றும்
விழுப்ப நெறி தூராவாறு. 56
கொட்டி அளந்த அமையாப் பாடலும், தட்டித்துப்
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும், துச்சிருந்தான்
நாளும் கலாம் காமுறுதலும், - இம் மூன்றும்
கேள்வியுள் இன்னாதன. 57
பழமையை நோக்கி, அளித்தல், கிழமையால்
கேளிர் உவப்பத் தழுவுதல், கேளிராத்
துன்னிய சொல்லால் இனம் திரட்டல், - இம் மூன்றும்
மன்னர்க்கு இளையான் தொழில். 58
கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும், பைங் கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும், இளையனாய்க்
கள் உண்டு வாழ்வான் குடிமையும், - இம் மூன்றும்
உள்ளன போலக் கெடும். 59
பேஎய்ப் பிறப்பிற் பெரும் பசியும், பாஅய்
விலங்கின் பிறப்பின் வெரூ உம், புலம் தெரியா
மக்கட் பிறப்பின் நிரப்பி இடும்பை, - இம் மூன்றும்
துக்கப் பிறப்பாய்விடும். 60
ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல்,
எய்துவது எய்தாமை முன் காத்தல், வைகலும்
மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல், - இம் மூன்றும்
வீறு சால் பேர் அமைச்சர் கோள். 61
நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன்
மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும், - இம் மூவர்
எச்சம் இழந்து வாழ்வார். 62
நேர்வு அஞ்சாதாரோடு நட்பும், விருந்து அஞ்சும்
ஈர்வளையை இல்லத்து இருத்தலும், சீர் பயவாத்
தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும்
நன்மை பயத்தல் இல. 63
நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும்
இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின்
மக்கள் பெறலின், மனைக் கிழத்தி; - இம் மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன். 64
அச்சம் அலை கடலின் தோன்றலும், ஆர்வு உற்ற
விட்ட கலகில்லாத வேட்கையும், கட்டிய
மெய்ந் நிலை காணா வெகுளியும், - இம் மூன்றும்
தம் நெய்யில் தாம் பொரியுமாறு. 65
கொழுநனை இல்லாள் கறையும், வழி நிற்கும்
சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும்; பற்றிய
கோல் கோடி வாழும் அரசும், - இவை மூன்றும்
சால்போடு பட்டது இல. 66
எதிர்நிற்கும் பெண்ணும், இயல்பு இல் தொழும்பும்,
செயிர் நிற்கும் சுற்றமும், ஆகி, மயிர் நரைப்ப,
முந்தைப் பழ வினையாய்த் தின்னும்; - இவை மூன்றும்
நொந்தார் செயக் கிடந்தது இல். 67
இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ் உலகின்
நில்லாமை உள்ளும் நெறிப்பாடும், எவ் உயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும், - இம் மூன்றும்
நன்று அறியும் மாந்தர்க்கு உள. 68
அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய
மெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும், நொந்து
நெறி மாறி வந்த விருந்தும், - இம் மூன்றும்
பெறுமாறு அரிய பொருள். 69
காவோடு அறக் குளம் தொட்டானும், நாவினால்
வேதம் கரை கண்ட பார்ப்பானும், தீது இகந்து
ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும், - இம் மூவர்
செல்வர் எனப்படுவார். 70
உடுத்தாடை இல்லாதார் நீராட்டும், பெண்டிர்
தொடுத்தாண்டு அவைப் போர் புகலும், கொடுத்து அளிக்கும்
ஆண்மை உடையவர் நல்குரவும், - இம் மூன்றும்
காண அரிய, என் கண். 71
நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்;
அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும்;
மறவனை எவ் உயிரும் அஞ்சும்; - இம் மூன்றும்
திறவதின் தீர்ந்த பொருள். 72
'இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல்!' என்பானும்,
பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும்,
விரி கடலூடு செல்வானும், - இம் மூவர்
அரிய துணிந்து ஒழுகுவார். 73
கொலைநின்று தின்று ஒழுகுவானும், பெரியவர்
புல்லுங்கால் தான் புல்லும் பேதையும், 'இல் எனக்கு ஒன்று;
ஈக!' என்பவனை நகுவானும், - இம் மூவர்
யாதும் கடைப்பிடியாதார். 74
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும், உள்ளத்து
உணர்வுடையான் ஓதிய நூலும், புணர்வின்கண்
தக்கது அறியும் தலைமகனும், - இம் மூவர்
பொத்து இன்றிக் காழ்த்த மரம். 75
மாரி நாள் வந்த விருந்தும், மனம் பிறிதாக்
காரியத்தில் குன்றாக் கணிகையும், வீரியத்து
மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும், - இம் மூவர்
போற்றற்கு அரியார், புரிந்து. 76
கயவரைக் கையிகந்து வாழ்தல், நயவரை
நள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல், தெள்ளி
வடுவான வாராமல் காத்தல், - இம் மூன்றும்
குடி மாசு இலார்க்கே உள. 77
தூய்மை உடைமை துணிவு ஆம்; தொழில் அகற்று
வாய்மை உடைமை வனப்பு ஆகும்; தீமை
மனத்தினும் வாயினும் சொல்லாமை; - மூன்றும்
தவத்தின் தருக்கினார் கோள். 78
பழி அஞ்சான் வாழும் பவுசும், அழிவினால்
கொண்ட அருந் தவம் விட்டானும், கொண்டிருந்து
இல் அஞ்சி வாழும் எருதும், - இவர் மூவர்
நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய். 79
முறை செய்யான் பெற்ற தலைமையும், நெஞ்சின்
நிறை இல்லான் கொண்ட தவமும், நிறை ஒழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும், - இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து. 80
தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும்,
நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும்,
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும், - இம் மூவர்
ஆசைக் கடலுள் ஆழ்வார். 81
சான்றாருள் சான்றான் எனப்படுதல், எஞ் ஞான்றும்
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல், பாய்ந்து எழுந்து
கொள்ளாருள் கொள்ளாத கூறாமை, - இம் மூன்றும்
நல் ஆள் வழங்கும் நெறி. 82
உப்பின் பெருங் குப்பை, நீர் படின், இல்லாகும்;
நட்பின் கொழு முளை, பொய் வழங்கின், இல்லாகும்;
செப்பம் உடையார் மழை அனையர்; - இம் மூன்றும்
செப்ப நெறி தூராவாறு. 83
வாய் நன்கு அமையாக் குளனும், வயிறு ஆரத்
தாய் முலை உண்ணாக் குழவியும், சேய் மரபின்
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும், - இம் மூவர்
நல் குரவு சேரப்பட்டார். 84
எள்ளப்படும் மரபிற்று ஆகலும், உள் பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும், முட்டு இன்றி
உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும், - இம் மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம். 85
அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்
கற்புப் பெரும் புணை காதலின் கை விடுதல்,
நட்பின் நய நீர்மை நீங்கல், - இவை மூன்றும்
குற்றம் தரூஉம் பகை. 86
கொல்வது தான அஞ்சான் வேண்டலும், கல்விக்கு
அகன்ற இனம் புகுவானும், இருந்து
விழு நிதி குன்று விப்பானும், - இம் மூவர்
முழு மக்கள் ஆகற்பாலார். 87
பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும்,
தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும்,
பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல், - இம் மூன்றும்
புணை இல் நிலை கலக்குமாறு. 88
அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும்,
பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்,
இறந்து இன்னா சொல்லகிற்பானும், - இம் மூவர்
பிறந்தும் பிறந்திலாதார். 89
ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி
சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும்
அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூன்றும்
இருள் உலகம் சேராத ஆறு. 90
பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல், உயிரை
இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல், மறுவந்து
தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல், - இம் மூன்றும்
மன்னா உடம்பின் தொழில். 91
விழுத் திணைத் தோன்றாதவனும், எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும், என்றும்
இறந்துரை காமுறுவானும், - இம் மூவர்
பிறந்தும் பிறவாதவர். 92
இருளாய்க் கழியும் உலகமும், யாதும்
தெருளாது உரைக்கும் வெகுள்வும், பொருள் அல்ல
காதற்படுக்கும் விழைவும், - இவை மூன்றும்
பேதைமை, வாழும் உயிர்க்கு. 93
நண்பு இலார்மாட்டு நசைக் கிழமை செய்வானும்,
பெண்பாலைக் காப்பு இகழும் பேதையும், பண்பு இல்
இழுக்கு ஆன சொல்லாடுவானும், - இம் மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியாதார். 94
அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும், மாந்தர்
செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும், செறுநரின்
வெவ் உரை நோனா வெகுள்வும், - இவை மூன்றும்
நல் வினை நீக்கும் படை. 95
கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ,
நல்லவை செய்வான் அரசன்; - இவர் மூவர்,
'பெய்' எனப் பெய்யும் மழை. 96
ஐங் குரவர் ஆணை மறுத்தலும், ஆர்வு உற்ற
எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும், நெஞ்சு அமர்ந்த
கற்பு உடையாளைத் துறத்தலும், - இம் மூன்றும்
நற் புடையிலாளர் தொழில். 97
செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்,
வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும்,
பெண்பால் கொழுநன் வழிச் செலவும், - இம் மூன்றும்
திங்கள் மும் மாரிக்கு வித்து. 98
கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும், காமுற்று
பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும், முட்டு இன்றி
அல்லவை செய்யும் அலவலையும், - இம் மூவர்
நல் உலகம் சேராதவர். 99
பத்திமை சான்ற படையும், பலர் தொகினும்
எத் திசையும் அஞ்சா எயில்-அரணும், வைத்து அமைந்த
எண்ணின் உலவா இரு நிதியும், - இம் மூன்றும்
மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு. 100
மிகைப் பாடல்கள்
கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல்,
இரப்பவர்கண் தேய்வேபோல் தோன்றல், இரப்பவர்க்கு ஒன்று
ஈவார் முகம்போல் ஒளிவிடுதல், - இம் மூன்றும்
ஓவாதே திங்கட்கு உள.
(புறத்திரட்டு. 1222) 1
பொருள் இல் ஒருவற்கு இளமையும், போற்றும்
அருள் இல் ஒருவற்கு அறனும், தெருளான்
திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும், - மூன்றும்
பரிந்தாலும் செய்யா பயன்.
(புறத்திரட்டு.1228) 2
சால் நெறிப் பாரா உழவனும், தன் மனையில்
மானம் ஒன்று இல்லா மனையாளும், சேனை
உடன்கொண்டு மீளா அரசும், - இம் மூன்றும்
கடன் கொண்டார் நெஞ்சில் கனா. 3
ஏர்க் குற்றம் பாரா உழவனும், இன் அடிசில்
பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும், ஊர்க்கு
வரும் குற்றம் பாராத மன்னும், - இம் மூவர்
இருந்திட்டு என்? போய் என், இவர்? 4
சிறப்புப் பாயிரம்
உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள்
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
மருவு நல்லாதன் மருந்து. 1
செல்வத் திருத்துளார் செம்மல், செரு அடு தோள்
நல்லாதன் என்னும் பெயரானே - பல்லார்
பரிவொடு நோய் அவியப் பன்னி ஆராய்ந்து,
திரிகடுகம் செய்த மகன். 2
திரிகடுகம் முற்றிற்று.


கடவுள் வாழ்த்து

கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணியமாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும்பூவைப் பூ வண்ணன் அடி.
நூல்

அருந்ததிக் கற்பினார் தோளும், திருந்தியதொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும், சொல்லின்அரில் அகற்றும் கேள்வியார் நட்பும், - இம் மூன்றும்திரிகடுகம் போலும் மருந்து. 1
தன் குணம் குன்றாத் தகைமையும், தா இல் சீர்இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின்நான்மறையாளர் வழிச் செலவும், - இம் மூன்றும்மேல் முறையாளர் தொழில். 2
கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்டஇல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்சிறியாரைக் கொண்டு புகலும், - இம் மூன்றும்அறியாமையான் வரும் கேடு. 3
பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்றபெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக்காய்வானைக் கை வாங்கிக் கோடலும், - இம் மூன்றும்சாவ உறுவான் தொழில். 4
வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்பவீழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்துவிருந்தினனாய் வேற்றூர் புகலும், - இம் மூன்றும்அருந் துயரம் காட்டும் நெறி. 5
பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்ஊராண்மை என்னும் செருக்கு. 6
வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின்அஞ்சுவான் கற்ற அரு நூலும், - இம் மூன்றும்துஞ்சு ஊமன் கண்ட கனா. 7
தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்தநல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்துவேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும், - இம் மூன்றும்தாம் தம்மைக் கூறாப் பொருள். 8
பெருமை உடையார் இனத்தின் அகறல்,உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,விழுமிய அல்ல துணிதல், - இம் மூன்றும்முழு மக்கள் காதலவை. 9
கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும்மூத்தோரை இல்லா அவைக் களனும், பாத்து உண்ணாத்தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும்நன்மை பயத்தல் இல. 10
விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்களியாதான் காவாது உரையும், தெளியாதான்கூரையுள் பல் காலும் சேறலும், - இம் மூன்றும்ஊர் எலாம் நோவது உடைத்து. 11
தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்;வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்;கோளாளன் என்பான் மறவாதான்; - இம் மூவர்கேள் ஆக வாழ்தல் இனிது. 12
சீலம் அறிவான் இளங்கிளை; சாலக்குடி ஓம்ப வல்லான் அரசன்; வடு இன்றிமாண்ட குணத்தான் தவசி; - என மூவர்யாண்டும் பெறற்கு அரியார். 13
இழுக்கல் இயல்பிற்று, இளமை; பழித்தவைசொல்லுதல் வற்றாகும், பேதைமை; யாண்டும்செறுவோடு நிற்கும், சிறுமை; - இம் மூன்றும்குறுகார், அறிவுடையார். 14
பொய் வழங்கி வாழும் பொறியறையும், கை திரிந்துதாழ்விடத்து நேர் கருதும் தட்டையும், ஊழினால்ஒட்டி வினை நலம் பார்ப்பானும், - இம் மூவர்நட்கப் படாஅதவர். 15
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும், மாசு இல் சீர்ப்பெண்ணினுள் கற்புடையாள் - பெற்றானும், உண்ணு நீர்க்கூவல் குறை இன்றித் தொட்டானும், - இம் மூவர்சாவா உடம்பு எய்தினார். 16
மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும், கற்புடையாள்பூப்பின்கண் சாராத் தலைமகனும், வாய்ப் பகையுள்சொல் வென்றி வேண்டும் இலிங்கியும், - இம் மூவர்கல்விப் புணை கைவிட்டார். 17
ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும், புணர்ந்தார்க்குஇரு தலையும் இன்னாப் பிரிவும், உருவினைஉள் உருக்கித் தின்னும் பெரும் பிணியும், - இம் மூன்றும்கள்வரின் அஞ்சப்படும். 18
கொல் யானைக்கு ஓடும் குணமிலியும், எல்லில்பிறன் கடை நிற்று ஒழுகுவானும், மறம் தெரியாதுஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும், - இம் மூவர்,நாடுங்கால், தூங்குபவர். 19
ஆசை பிறன்கண் படுதலும், பாசம்பசிப்ப மடியைக் கொளலும், கதித்து ஒருவன்கல்லான் என்று எள்ளப்படுதலும், - இம் மூன்றும்எல்லார்க்கும் இன்னாதன. 20
வருவாயுள் கால் வழங்கி வாழ்தல், செரு வாய்ப்பச்செய்தவை நாடாச் சிறப்புடைமை, எய்தப்பல நாடி நல்லவை கற்றல், - இம் மூன்றும்நல மாட்சி நல்லவர் கோள். 21
பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும்பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப்பொய்த்துரை என்னும் புகை இருளும், - இம் மூன்றும்வித்து; அற, வீடும் பிறப்பு. 22
தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தால்குற்றம் கடிந்த ஒழுக்கமும், தெற்றெனப்பல் பொருள் நீங்கிய சிந்தையும், - இம் மூன்றும்நல் வினை ஆர்க்கும் கயிறு. 23
காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொல்லும்,தூண்டிலினுள் உட்பொதிந்த தேரையும், மாண்ட சீர்,காழ்ந்த பகைவர் வணக்கமும், - இம் மூன்றும்ஆழ்ச்சிப் படுக்கும், அளறு. 24
செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்து அகன்றஅல்குல் விலை பகரும் ஆய்தொடியும், நல்லவர்க்குவைத்த அறப்புறம் கொண்டானும், - இம் மூவர்கைத்து உண்ணார், கற்றறிந்தார். 25
ஒல்வது அறியும் விருந்தினனும், ஆர் உயிரைக்கொல்வது இடை நீக்கி வாழ்வானும், வல்லிதின்சீலம் இனிது உடைய ஆசானும், - இம் மூவர்ஞாலம் எனப் படுவார். 26
உண் பொழுது நீராடி உண்டலும், என் பெறினும்பால் பற்றிச் சொல்லா விடுதலும் தோல் வற்றிச்சாயினும் சான்றாண்மை குன்றாமை, - இம் மூன்றும்தூஉயம் என்பார் தொழில். 27
வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும்,இல்லது காமுற்று இருப்பானும், கல்விச்செவிக் குற்றம் பார்த்திருப்பானும், - இம் மூவர்உமிக் குற்றுக் கை வருத்துவார். 28
பெண் விழைந்து பின் செலினும், தன் செலவில் குண்றாமை;கண் விழைந்து கையுறினும், காதல் பொருட்கு இன்மை;மண் விழைந்து வாழ் நாள் மதியாமை; - இம் மூன்றும்நுண் விழைந்த நூலவர் நோக்கு. 29
தன் நச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும்,மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்,என்றும் அழுக்காறு இகந்தானும், - இம் மூவர்நின்ற புகழ் உடையார். 30
பல்லவையுள் நல்லவை கற்றலும், பாத்து உண்டு ஆங்இல்லறம் முட்டாது இயற்றலும், வல்லிதின்தாளின் ஒரு பொருள் ஆக்கலும், - இம் மூன்றும்கேள்வியுள் எல்லாம் தலை. 31
நுண் மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலாவெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல் மொழியைச்சிற்றினம் அல்லார்கண் சொல்லலும், - இம் மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன். 32
கோல் அஞ்சி வாழும் குடியும், குடி தழீஇஆலம் வீழ் போலும் அமைச்சனும், வேலின்கடை மணி போல் திண்ணியான் காப்பும், - இம் மூன்றும்படை வேந்தன் பற்று விடல்! 33
மூன்று கடன் கழித்த பார்ப்பானும், ஓர்ந்துமுறை நிலை கோடா அரசும், சிறைநின்றுஅலவலை அல்லாக் குடியும், - இம் மூவர்உலகம் எனப்படுவார். 34
முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும்,நுண் நூல் பெருங் கேள்வி நூல் கரை கண்டானும்,மைந் நீர்மை மேல் இன்றி மயல் அறுப்பான், - இம் மூவர்மெய்ந் நீர்மைமேல் நிற்பவர். 35
ஊன் உண்டு, 'உயிர்கட்கு அருளுடையெம்!' என்பானும்,'தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும்' என்பானும்,காமுறு வேள்வியில் கொல்வானும், - இம் மூவர்தாம் அறிவர், தாம் கண்டவாறு. 36
குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனியசால் பினில் தோன்றும், குடிமையும்; பால் போலும்தூய்மையுள் தோன்றும் பிரமாணம்; - இம் மூன்றும்வாய்மை உடையார் வழக்கு. 37
தன்னை வியந்து தருக்கலும் தாழ்வு இன்றிக்கொன்னே வெகுளி பெருக்கலும், முன்னியபல் பொருள் வெஃகுஞ் சிறுமையும், - இம் மூன்றும்செல்வம் உடைக்கும் படை. 38
புலை மயக்கம் வேண்டி பொருட்பெண்டிர்த் தோய்தல்,கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்துபொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல், - இம் மூன்றும்நன்மை இலாளர் தொழில். 39
வெகுளி நுணுக்கம் விறலும் மகளிர்கட்குஒத்த ஒழுக்கம் உடைமையும், பாத்து உண்ணும்நல் அறிவாண்மை தலைப்படலும், - இம் மூன்றும்தொல் அறிவாளர் தொழில். 40
அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும், துளங்கினும்தன் குடிமை குன்றாத் தகைமையும், அன்பு ஓடிநாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும், - இம் மூன்றும்கேள்வியுள் எல்லாம் தலை. 41
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை,பழகினும் பார்ப்பாரைத் தீப்போல், ஒழுகல்,உழவின்கண் காமுற்று வாழ்தல், - இம் மூன்றும்அழகு என்ப வேளாண் குடிக்கு. 42
வாயின் அடங்குதல் துப்புரவு ஆம்; மாசு அற்றசெய்கை அடங்குதல் திப்பியம் ஆம்; பொய் இன்றிநெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும்; - இம் மூன்றும்வஞ்சத்தின் தீர்ந்த பொருள். 43
விருந்து இன்றி உண்ட பகலும் திருந்திழையார்புல்லப் புடை பெயராக் கங்குலும், இல்லார்க்கு ஒன்றுஈயாது ஒழிந்தகன்ற காலையும், - இம் மூன்றும்நோயே, உரன் உடையார்க்கு. 44
ஆற்றானை, 'ஆற்று' என்று அலைப்பானும்; அன்பு இன்றி,ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும், கூற்றம்வரவு உண்மை சிந்தியாதானும்; - இம் மூவர்நிரயத்துச் சென்று வீழ்வார். 45
கால்தூய்மை இல்லாக் கலி மாவும், காழ் கடிந்துமேல் தூய்மை இல்லாத வெங் களிறும், சீறிக்கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி, - இம் மூன்றும்குறுகார், அறிவுடையார். 46
சில் சொல், பெருந் தோள், மகளிரும்; பல் வகையும்தாளினால் தந்த விழு நிதியும்; நாள்தொறும்நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும்; - இம் மூன்றும் காப்பு இகழல் ஆகாப் பொருள். 47
வைததனை இன் சொல்லாக் கொள்வானும், நெய் பெய்தசோறு என்று கூழை மதிப்பானும், ஊறியகைப்பதனைக் கட்டி என்று உண்பானும், - இம் மூவர்மெய்ப் பொருள் கண்டு வாழ்வார். 48
ஏவியது மாற்றும் இளங் கிளையும், காவாதுவைது எள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய் தெள்ளிஅம் மனை தேய்க்கும் மனையாளும், - இம் மூவர்இம்மைக்கு உறுதி இலார். 49
கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும்உள் பொருள் சொல்லாச் சல மொழி மாந்தரும்,இல் இருந்து எல்லை கடப்பாளும், - இம் மூவர்வல்லே மழை அருக்கும் கோள். 50
தூர்ந்து ஒழுகிக்கண்ணும், துணைகள் துணைகளே;சார்ந்து ஒழுகிக்கண்ணும், சலவர் சலவரே;ஈர்ந்த கல் இன்னார் கயவர்; - இவர் மூவர்,தேர்ந்தக்கால், தோன்றும் பொருள். 51
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்; காமுற்றபெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை; நண்ணும்மறுமைக்கு அணிகலம் கல்வி; - இம் மூன்றும்குறியுடையோர்கண்ணே உள. 52
குருடன் மனையாள் அழகும், இருள் தீரக்கற்று அறிவில்லான் கதழ்ந்துரையும், பற்றியபண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும், - இம் மூன்றும்எண்ணின், தெரியாப் பொருள். 53
தன் பயம் தூக்காரைச் சார்தலும், தான் பயவாநன் பயம் காய்வின்கண் கூறலும், பின் பயவாக்குற்றம் பிறர் மேல் உரைத்தலும், - இம் மூன்றும்தெற்றெனவு இல்லார் தொழில். 54
அரு மறை காவாத நட்பும், பெருமையைவேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும், யாண்டானும்செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும், - இம் மூவர்ஒன்றாள் எனப்படுவார். 55
முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து, பிற்பாடுதந்தையும் தாயும் வழிபட்டு, வந்தஒழுக்கம் பெரு நெறி சேர்தல், - இம் மூன்றும்விழுப்ப நெறி தூராவாறு. 56
கொட்டி அளந்த அமையாப் பாடலும், தட்டித்துப்பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும், துச்சிருந்தான்நாளும் கலாம் காமுறுதலும், - இம் மூன்றும்கேள்வியுள் இன்னாதன. 57
பழமையை நோக்கி, அளித்தல், கிழமையால்கேளிர் உவப்பத் தழுவுதல், கேளிராத்துன்னிய சொல்லால் இனம் திரட்டல், - இம் மூன்றும்மன்னர்க்கு இளையான் தொழில். 58
கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும், பைங் கூழ்விளைவின்கண் போற்றான் உழவும், இளையனாய்க்கள் உண்டு வாழ்வான் குடிமையும், - இம் மூன்றும்உள்ளன போலக் கெடும். 59
பேஎய்ப் பிறப்பிற் பெரும் பசியும், பாஅய்விலங்கின் பிறப்பின் வெரூ உம், புலம் தெரியாமக்கட் பிறப்பின் நிரப்பி இடும்பை, - இம் மூன்றும்துக்கப் பிறப்பாய்விடும். 60
ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல்,எய்துவது எய்தாமை முன் காத்தல், வைகலும்மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல், - இம் மூன்றும்வீறு சால் பேர் அமைச்சர் கோள். 61
நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன்மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றிவைத்த அடைக்கலம் கொள்வானும், - இம் மூவர்எச்சம் இழந்து வாழ்வார். 62
நேர்வு அஞ்சாதாரோடு நட்பும், விருந்து அஞ்சும்ஈர்வளையை இல்லத்து இருத்தலும், சீர் பயவாத்தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும்நன்மை பயத்தல் இல. 63
நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும்இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின்மக்கள் பெறலின், மனைக் கிழத்தி; - இம் மூன்றும்கற்புடையாள் பூண்ட கடன். 64
அச்சம் அலை கடலின் தோன்றலும், ஆர்வு உற்றவிட்ட கலகில்லாத வேட்கையும், கட்டியமெய்ந் நிலை காணா வெகுளியும், - இம் மூன்றும்தம் நெய்யில் தாம் பொரியுமாறு. 65
கொழுநனை இல்லாள் கறையும், வழி நிற்கும்சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும்; பற்றியகோல் கோடி வாழும் அரசும், - இவை மூன்றும்சால்போடு பட்டது இல. 66
எதிர்நிற்கும் பெண்ணும், இயல்பு இல் தொழும்பும்,செயிர் நிற்கும் சுற்றமும், ஆகி, மயிர் நரைப்ப,முந்தைப் பழ வினையாய்த் தின்னும்; - இவை மூன்றும்நொந்தார் செயக் கிடந்தது இல். 67
இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ் உலகின்நில்லாமை உள்ளும் நெறிப்பாடும், எவ் உயிர்க்கும்துன்புறுவ செய்யாத தூய்மையும், - இம் மூன்றும்நன்று அறியும் மாந்தர்க்கு உள. 68
அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்தியமெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும், நொந்துநெறி மாறி வந்த விருந்தும், - இம் மூன்றும்பெறுமாறு அரிய பொருள். 69
காவோடு அறக் குளம் தொட்டானும், நாவினால்வேதம் கரை கண்ட பார்ப்பானும், தீது இகந்துஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும், - இம் மூவர்செல்வர் எனப்படுவார். 70
உடுத்தாடை இல்லாதார் நீராட்டும், பெண்டிர்தொடுத்தாண்டு அவைப் போர் புகலும், கொடுத்து அளிக்கும்ஆண்மை உடையவர் நல்குரவும், - இம் மூன்றும்காண அரிய, என் கண். 71
நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்;அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும்;மறவனை எவ் உயிரும் அஞ்சும்; - இம் மூன்றும்திறவதின் தீர்ந்த பொருள். 72
'இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல்!' என்பானும்,பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும்,விரி கடலூடு செல்வானும், - இம் மூவர்அரிய துணிந்து ஒழுகுவார். 73
கொலைநின்று தின்று ஒழுகுவானும், பெரியவர்புல்லுங்கால் தான் புல்லும் பேதையும், 'இல் எனக்கு ஒன்று;ஈக!' என்பவனை நகுவானும், - இம் மூவர்யாதும் கடைப்பிடியாதார். 74
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும், உள்ளத்துஉணர்வுடையான் ஓதிய நூலும், புணர்வின்கண்தக்கது அறியும் தலைமகனும், - இம் மூவர்பொத்து இன்றிக் காழ்த்த மரம். 75
மாரி நாள் வந்த விருந்தும், மனம் பிறிதாக்காரியத்தில் குன்றாக் கணிகையும், வீரியத்துமாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும், - இம் மூவர்போற்றற்கு அரியார், புரிந்து. 76
கயவரைக் கையிகந்து வாழ்தல், நயவரைநள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல், தெள்ளிவடுவான வாராமல் காத்தல், - இம் மூன்றும்குடி மாசு இலார்க்கே உள. 77
தூய்மை உடைமை துணிவு ஆம்; தொழில் அகற்றுவாய்மை உடைமை வனப்பு ஆகும்; தீமைமனத்தினும் வாயினும் சொல்லாமை; - மூன்றும்தவத்தின் தருக்கினார் கோள். 78
பழி அஞ்சான் வாழும் பவுசும், அழிவினால்கொண்ட அருந் தவம் விட்டானும், கொண்டிருந்துஇல் அஞ்சி வாழும் எருதும், - இவர் மூவர்நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய். 79
முறை செய்யான் பெற்ற தலைமையும், நெஞ்சின்நிறை இல்லான் கொண்ட தவமும், நிறை ஒழுக்கம்தேற்றாதான் பெற்ற வனப்பும், - இவை மூன்றும்தூற்றின்கண் தூவிய வித்து. 80
தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும்,நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும்,வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும், - இம் மூவர்ஆசைக் கடலுள் ஆழ்வார். 81
சான்றாருள் சான்றான் எனப்படுதல், எஞ் ஞான்றும்தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல், பாய்ந்து எழுந்துகொள்ளாருள் கொள்ளாத கூறாமை, - இம் மூன்றும்நல் ஆள் வழங்கும் நெறி. 82
உப்பின் பெருங் குப்பை, நீர் படின், இல்லாகும்;நட்பின் கொழு முளை, பொய் வழங்கின், இல்லாகும்;செப்பம் உடையார் மழை அனையர்; - இம் மூன்றும்செப்ப நெறி தூராவாறு. 83
வாய் நன்கு அமையாக் குளனும், வயிறு ஆரத்தாய் முலை உண்ணாக் குழவியும், சேய் மரபின்கல்வி மாண்பு இல்லாத மாந்தரும், - இம் மூவர்நல் குரவு சேரப்பட்டார். 84
எள்ளப்படும் மரபிற்று ஆகலும், உள் பொருளைக்கேட்டு மறவாத கூர்மையும், முட்டு இன்றிஉள் பொருள் சொல்லும் உணர்ச்சியும், - இம் மூன்றும்ஒள்ளிய ஒற்றாள் குணம். 85
அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்கற்புப் பெரும் புணை காதலின் கை விடுதல்,நட்பின் நய நீர்மை நீங்கல், - இவை மூன்றும்குற்றம் தரூஉம் பகை. 86
கொல்வது தான அஞ்சான் வேண்டலும், கல்விக்குஅகன்ற இனம் புகுவானும், இருந்துவிழு நிதி குன்று விப்பானும், - இம் மூவர்முழு மக்கள் ஆகற்பாலார். 87
பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும்,தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும்,பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல், - இம் மூன்றும்புணை இல் நிலை கலக்குமாறு. 88
அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும்,பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்,இறந்து இன்னா சொல்லகிற்பானும், - இம் மூவர்பிறந்தும் பிறந்திலாதார். 89
ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறிசேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும்அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூன்றும்இருள் உலகம் சேராத ஆறு. 90
பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல், உயிரைஇறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல், மறுவந்துதன் உடம்பு கன்றுங்கால் நாணுதல், - இம் மூன்றும்மன்னா உடம்பின் தொழில். 91
விழுத் திணைத் தோன்றாதவனும், எழுத்தினைஒன்றும் உணராத ஏழையும், என்றும்இறந்துரை காமுறுவானும், - இம் மூவர்பிறந்தும் பிறவாதவர். 92
இருளாய்க் கழியும் உலகமும், யாதும்தெருளாது உரைக்கும் வெகுள்வும், பொருள் அல்லகாதற்படுக்கும் விழைவும், - இவை மூன்றும்பேதைமை, வாழும் உயிர்க்கு. 93
நண்பு இலார்மாட்டு நசைக் கிழமை செய்வானும்,பெண்பாலைக் காப்பு இகழும் பேதையும், பண்பு இல்இழுக்கு ஆன சொல்லாடுவானும், - இம் மூவர்ஒழுக்கம் கடைப்பிடியாதார். 94
அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும், மாந்தர்செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும், செறுநரின்வெவ் உரை நோனா வெகுள்வும், - இவை மூன்றும்நல் வினை நீக்கும் படை. 95
கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டனசெய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ,நல்லவை செய்வான் அரசன்; - இவர் மூவர்,'பெய்' எனப் பெய்யும் மழை. 96
ஐங் குரவர் ஆணை மறுத்தலும், ஆர்வு உற்றஎஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும், நெஞ்சு அமர்ந்தகற்பு உடையாளைத் துறத்தலும், - இம் மூன்றும்நற் புடையிலாளர் தொழில். 97
செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்,வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும்,பெண்பால் கொழுநன் வழிச் செலவும், - இம் மூன்றும்திங்கள் மும் மாரிக்கு வித்து. 98
கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும், காமுற்றுபெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும், முட்டு இன்றிஅல்லவை செய்யும் அலவலையும், - இம் மூவர்நல் உலகம் சேராதவர். 99
பத்திமை சான்ற படையும், பலர் தொகினும்எத் திசையும் அஞ்சா எயில்-அரணும், வைத்து அமைந்தஎண்ணின் உலவா இரு நிதியும், - இம் மூன்றும்மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு. 100
மிகைப் பாடல்கள்

கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல்,இரப்பவர்கண் தேய்வேபோல் தோன்றல், இரப்பவர்க்கு ஒன்றுஈவார் முகம்போல் ஒளிவிடுதல், - இம் மூன்றும்ஓவாதே திங்கட்கு உள.(புறத்திரட்டு. 1222) 1
பொருள் இல் ஒருவற்கு இளமையும், போற்றும்அருள் இல் ஒருவற்கு அறனும், தெருளான்திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும், - மூன்றும்பரிந்தாலும் செய்யா பயன்.(புறத்திரட்டு.1228) 2
சால் நெறிப் பாரா உழவனும், தன் மனையில்மானம் ஒன்று இல்லா மனையாளும், சேனைஉடன்கொண்டு மீளா அரசும், - இம் மூன்றும்கடன் கொண்டார் நெஞ்சில் கனா. 3
ஏர்க் குற்றம் பாரா உழவனும், இன் அடிசில்பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும், ஊர்க்குவரும் குற்றம் பாராத மன்னும், - இம் மூவர்இருந்திட்டு என்? போய் என், இவர்? 4
சிறப்புப் பாயிரம்

உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள்திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்மருவு நல்லாதன் மருந்து. 1
செல்வத் திருத்துளார் செம்மல், செரு அடு தோள்நல்லாதன் என்னும் பெயரானே - பல்லார்பரிவொடு நோய் அவியப் பன்னி ஆராய்ந்து,திரிகடுகம் செய்த மகன். 2

திரிகடுகம் முற்றிற்று.

by Swathi   on 29 Mar 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
27-Aug-2016 19:47:07 Kasthuriraman said : Report Abuse
Great work.Sacred service to Tamil annal.Van najam. VANGE VALA MUDAN.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.