திருச்செந்தூரில், சூரசம்ஹாரம் நடப்பதையொட்டி 3,200 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த 8ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடலில் புனிதநீராடி விரதம் இருந்து சுவாமியை வழிபட்டு வருகின்றனர். 10-ந் தேதி காலை 10 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளி கிரிபிரகாரம் வலம் வந்தார்.
இந்தநிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்சம்ஹாரம் 13-ந் தேதி நடக்கிறது. மாலையில் கடற்கரையில் சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனைக் காண எண்ணற்ற பக்தர்கள் குவிவார்கள். இதையொட்டி, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
திருச்செந்தூர் முழுவதும் 10 கண்காணிப்பு கோபுரங்கள், 70 சிசிடிவி கேமிராக்கள், 10 எல்இடி டிவிக்கள் ஆகியன பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
|