LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

திருடனைப் பிடித்த தீரச் சிறுவன்

அந்த ஊருக்குப் புதிதாக வந்த ஒருவர் , பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பையனைப் பார்த்து “ தம்பி ! உங்கள் ஊரில் பெரியவர்கள் யாரும் பிறந்திருக்கிறார்களா ? ” என்று கேட்டார் . அவரை நிமிர்ந்து பார்த்த பையன் , எங்கள் ஊரில் பெரியவர்களாக யாரும் பிறப்பதில்லை . எல்லோரும் குழந்தைகளாகத்தான் பிறக்கிறார்கள் என்று பதில் சொன்னான் .

உண்மைதான் . பிறக்கும் போது எல்லோரும் குழந்தைகள்தான் . பலர் உடலால் மட்டும் பெரியவர்கள் ஆவார்கள் . சிலர் மட்டும் உள்ளத்தால் பெரியவர்கள் ஆவார்கள் .

இறைவன் வானத்திலிருந்து பூமிக்கு அவ்வப்போது சில கடிதங்கள் எழுதுவான் . அத்தகைய கடிதங்கள் பல செய்திகளைத் தாங்கி வரும் . அந்தக் கடிதங்களே பூமியில் மகான்களாக அவதரிக்கின்றன .

அப்படியொரு கடிதம் தமிழகத்தில் விருதுபட்டி என்ற ஊருக்கு 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி அனுப்பப்பட்டது . குமாரசாமி நாடார் , சிவகாமி அம்மையார் என்ற தம்பதிகள் அந்தக் கடிதத்தை பத்திரமாக ‘ டெலிவரி ’ செய்தார்கள் . அந்தக் கடிதத்திலும் சிறப்பான செய்திகள் பல இருக்கின்றன என்ற தகவல் போகப்போக எல்லோருக்கும் புரிந்தது .

கழுத்தில் ஒரு கயிறு , கையில் காப்பு , குடுமி இத்தகைய தோற்றத்தில் காட்சியளித்த “ காமாட்சி ராஜா ” என்ற சிறுவன் எதிர்காலத்தில் காமராஜர் என்ற பெருந்தலைவராக உருவாகப் போகிறான் என்பதற்கான அடையாளம் அப்போதே தெரிந்தது .

விருதுபட்டியில் திருடன் ஒருவன் தனது கைவரிசையைக் காட்டிக் கொண்டிருந்தான் . எல்லோருக்கும் குலை நடுக்கம் . பெரியவர்கள் கூட பயந்து நடுங்கினார்கள் . இருட்டத் தொடங்கியதுமே பலர் தங்களுடைய வீடுகளைப் பூட்டிக்கொண்டார்கள் . திருடனைப் பிடிப்பதற்குப் பதிலாக தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே பலர் கவனம் செலுத்தினார்கள் . தவறுகளைத்தட்டிக் கேட்க வேண்டும் என்ற தைரியம் , அதனால் ஆபத்து வந்தால் ஏற்றுக்கொள்கிற அஞ்சாநெஞ்சம் சமுதாயத்துக்கு நாம் பயன்பட வேண்டும் என்ற தொண்டுள்ளம் இவையெல்லாம் சிறுவனாக இருந்த காமராசரிடம் நிரம்பியிருந்தது . அதனால் திருடனைப் பிடிக்க அவரே திட்டமிட்டார் . தனக்கு உதவியாக சில நண்பர்களைச் சேர்த்துக் கொண்டார் . திருடன் வரும் இருட்டு வழியில் குறுக்காக ஒரு கயிரைக் கட்டி வைத்தார்கள் . அவன் விழுந்ததும் கண்ணில் தூவ மிளகாய்ப் பொடி தயாராக இருந்தது . பாதையின் ஓரத்தில் பதுங்கியிருந்து திருடன் வரும் நேரத்தை எதிர்பார்த்திருந்தார்கள் . திட்டமிட்டபடி திருடன் வந்தான் . கயிறு தடுக்கி தடுமாறி விழுந்தான் . கணநேரத்தில் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டது . சாக்குப்பையில் போட்டு குண்டுக்கட்டாகக் கட்டிவிட்டார்கள் . திருடனைப் பிடித்த சிறுவனின் தீரச் செயல் கண்டு ஊரே வியந்தது .

இத்தகைய திருடர்கள் எந்தத்துறையிலும் ஊடுருவாமல் பார்த்துக்கொள்வது நல்லது .

by Swathi   on 20 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.