|
|
SEARCH Results |
குறள்: 241 |
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 242 |
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 243 |
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 244 |
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 245 |
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 246 |
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 247 |
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 248 |
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 249 |
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 250 |
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து. |
குறள் விளக்கம் |
|
|
|