LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

திருமணம் என்பது சிக்கலா?

என் மனதில் திருமணம் என்பது ஒருவித மீளமுடியாத பொறுப்பில் சிக்கிக்கொள்வது என்று தோன்றுகிறது. நாம் செய்தே ஆக வேண்டிய கடமைகளும், எதிர்பார்ப்பும் இந்த உறவில் இருக்கிறது. இப்படி எதிர்பார்ப்பு இல்லாத உறவு அமைய முடியாதா?


சத்குரு:


எங்கே உறவு இருந்தாலும், அங்கே ஒரு எதிர்பார்ப்பு இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஏதோ ஒரு தேவை இருப்பதால் தானே எந்த உறவும் அமைகிறது? எந்தத் தேவையும் இல்லாத நிலை இருந்தால், அடுத்தவரை நாடி உறவு அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லையே?


எதிர்பார்ப்பு இல்லாத உறவு என்பதெல்லாம் பாசாங்கு ஆன்மீகவாதிகளின் சிபாரிசு. இதையெல்லாம் நம்பி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். எங்கோ இருக்கும் வெறுமையை நிரப்பி, உங்களைத் திருப்திப் படுத்திக் கொள்ளத்தான் நீங்கள் உறவை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்.


உங்கள் தேவைக்காகத் தான் இந்த உறவை நாடினீர்கள் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்தால் போதும். ‘அப்படி எதுவும் இல்லை, இன்னொரு உயிரை சந்தோஷப் படுத்துவதற்காகத் தான் அதனுடன் உறவு கொண்டேன்’ என்று நீங்கள் சொன்னாலும், அந்த உயிரை சந்தோஷப்படுத்த விரும்பியது நீங்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த விதத்தில் பார்த்தால் உங்கள் விருப்பத்தை தானே அந்த உறவு நிறைவேற்றி இருக்கிறது?


இந்த அடிப்படையை உணர்ந்தால், அந்த இன்னொரு உயிரை நீங்கள் மதிக்கத் தொடங்கி விடுவீர்கள். ஓரு உயிரை எப்போது மதிக்கிறீர்களோ, அவ்வுயிருக்கு நீங்கள் பொறுப்பேற்பது தானாக நிகழும்.


இந்தப் பொறுப்புணர்வு இல்லையென்றால், உறவுகள் உணர்ச்சிக் கொந்தளிப்புகளாக மட்டுமே இருக்கும். எவ்வித பாதுகாப்பு உணர்வும் இல்லாமல், அது பதற்றத்தில் தத்தளிக்கும். பொறுப்பேற்கத் தயங்கும் மேற்கத்திய உறவுகளில் இதை அதிகம் காணமுடியும்.


வியாபாரமாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, உடல், மன உணர்ச்சி ரீதியான கொந்தளிப்புகள் அடங்கினால் தான், அடுத்த கட்டத்தைப் பற்றி ஒருவர் தீர்க்கமாக யோசிக்க முடியம்.

by Swathi   on 28 Mar 2014  0 Comments
Tags: திருமணம்   சிக்கல்   சத்குரு   Marriage   Trouble   Sadhguru     
 தொடர்புடையவை-Related Articles
திருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்.... திருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-13-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-13-11-2015
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-06-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-06-11-2015
வாயுத் தொல்லை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வும் !! வாயுத் தொல்லை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வும் !!
ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !! ரஜினிகாந்த்தின் கபாலிக்கு வந்த புது சிக்கல் !!
நலம் காக்கும் சித்த மருத்துவம் – 39 நலம் காக்கும் சித்த மருத்துவம் – 39
இல்லற வாழ்க்கை இனித்திட - குடும்ப நல நீதிமன்றத்தில் முத்தான பத்து அறிவுரைகள் !! இல்லற வாழ்க்கை இனித்திட - குடும்ப நல நீதிமன்றத்தில் முத்தான பத்து அறிவுரைகள் !!
விவாகத்தின் போது மணப்பெண்ணிற்குக் கட்டப்படும் தாலி-யின் மகத்துவங்கள்..!! விவாகத்தின் போது மணப்பெண்ணிற்குக் கட்டப்படும் தாலி-யின் மகத்துவங்கள்..!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.