|
||||||||
திருநங்கையாக இருப்பது தவறா? |
||||||||
“நான் ஒரு அரவாணி. பெற்றவர்களாலேயே நிராகரிக்கப்பட்டேன். சமூகத்தால் ஒதுக்கப்பட்ட இனத்தில் ஓர் அங்கமாகி, வேதனையுடன் வாழ்கிறேன். கடவுள் என்னை ஏன் இப்படிப் படைத்தார்?”
சத்குரு:
பெண்ணின் கருப்பை, மனித உடல்களைத் தயாரிக்கும் அற்புதமான, அதிசயமான தொழிற்சாலை!
பரவலாக நிலவிவரும் கருத்து போல, ஓரிடத்தில் தெய்வம் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு உயிராகப் படைத்து வெளியே அனுப்பிக் கொண்டு இருப்பதில்லை. ஒவ்வொரு உயிரிலும் இருக்கும் அடிப்படைச் சக்தியான உயிர்த்தன்மையே, தத்தமது உடல் தயாரிப்பு வேலையைக் கவனித்துக் கொள்கிறது. இது புரிந்து கொள்ளக் கடினமான, மிகச் சிக்கலான தொழிற்சாலை!
எந்தத் தொழிற்சாலையிலும் குறையுள்ள ஒருசில தயாரிப்புகள் நிகழ்வது உண்டு. கருப்பைத் தொழிற்சாலையிலும் சிலசமயம் தவறுகள் நிகழ்வதுண்டு. எத்தனையோ உயிர்கள், பார்வைக்கோளாறு, கேட்கும் திறன் இன்மை, வளர்ச்சியுறாத மூளை என நம்மிலிருந்து வித்தியாசப்பட்டு இருப்பது நாம் அறியாததல்ல.
ஒற்றைக் கையுடன் ஜனிக்கும் குழந்தை, தலைகள் ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் போன்ற தீவிரத் தவறுகள் படைப்பில் நிகழ்ந்தால், உடனே அதைப் பெரிதுபடுத்துகிறோம்.
உங்கள் நிலையும் இதுபோன்ற ஒன்றுதான். இதை குறைபாடு என்று பார்க்காமல், மாறுபாடு என்று பார்க்கும் பக்குவம் இங்கே வரவில்லை.
உங்களைப் போன்ற அரவாணிகளுக்கு மட்டும்தான் வேதனையான நிலை என்பதில்லை; நம்மிலிருந்து மாறுபட்ட தோற்றத்துடன் எது இருந்தாலும், அதைத் தாழ்த்திப் பார்ப்பது நம் பழக்கமாகிவிட்டது. சரும நிறம் மாறினாலே சமூகம் சமமாகப் பார்க்கத் தயாராக இல்லையே!
பல நூறு ஆண்டுகளாக மாறுபட்ட இனத்தினரைத் தாழ்த்தி, சித்ரவதைக்கு உள்ளாக்கி, அடிமைகளாக நடத்துவது இந்தப் பூமியில் நடந்தேறி இருக்கிறது. நாகரிகம் வளர்ந்துவிட்டதாகப் பறைசாற்றிக் கொள்ளும் இன்றைய தினத்திலும், வேறுபாடு காரணமாக நிகழும் கொடுமைகள் உலகெங்கும் அரங்கேறிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
மூன்று தலைகளுடன் கடவுள் இருப்பதாகச் சொன்னால், மண்டியிட்டு வழிபடத் தயாராக இருப்பவர்கள், இரண்டு தலைகளுடன் மனித உயிர் வந்தால், அதை மேம்பட்ட தோற்றமாகப் பார்க்கத் தயாராக இல்லை. கல்லெறிந்து காயப்படுத்தவே முனைகிறார்கள்.
உடல் தோற்றம் என்பது ஒருவித வெளிப்பாடுதான். உள்ளிருக்கும் உயிர்த்தன்மையில் எந்த மாற்றமும் இல்லை. தங்களின் உயிர்த்தன்மையை உணர்ந்து கொள்ளாதவர்கள்தான் குறைபாடு உடையவர்கள். இதைப் புரிந்து கொண்ட பக்குவத்துடன் சமூகம் இயங்கினாலே போதும்…. எல்லாம் திருந்திவிடும்.
“நான் ஒரு அரவாணி. பெற்றவர்களாலேயே நிராகரிக்கப்பட்டேன். சமூகத்தால் ஒதுக்கப்பட்ட இனத்தில் ஓர் அங்கமாகி, வேதனையுடன் வாழ்கிறேன். கடவுள் என்னை ஏன் இப்படிப் படைத்தார்?” சத்குரு: பெண்ணின் கருப்பை, மனித உடல்களைத் தயாரிக்கும் அற்புதமான, அதிசயமான தொழிற்சாலை! பரவலாக நிலவிவரும் கருத்து போல, ஓரிடத்தில் தெய்வம் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு உயிராகப் படைத்து வெளியே அனுப்பிக் கொண்டு இருப்பதில்லை. ஒவ்வொரு உயிரிலும் இருக்கும் அடிப்படைச் சக்தியான உயிர்த்தன்மையே, தத்தமது உடல் தயாரிப்பு வேலையைக் கவனித்துக் கொள்கிறது. இது புரிந்து கொள்ளக் கடினமான, மிகச் சிக்கலான தொழிற்சாலை! எந்தத் தொழிற்சாலையிலும் குறையுள்ள ஒருசில தயாரிப்புகள் நிகழ்வது உண்டு. கருப்பைத் தொழிற்சாலையிலும் சிலசமயம் தவறுகள் நிகழ்வதுண்டு. எத்தனையோ உயிர்கள், பார்வைக்கோளாறு, கேட்கும் திறன் இன்மை, வளர்ச்சியுறாத மூளை என நம்மிலிருந்து வித்தியாசப்பட்டு இருப்பது நாம் அறியாததல்ல. ஒற்றைக் கையுடன் ஜனிக்கும் குழந்தை, தலைகள் ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் போன்ற தீவிரத் தவறுகள் படைப்பில் நிகழ்ந்தால், உடனே அதைப் பெரிதுபடுத்துகிறோம். உங்கள் நிலையும் இதுபோன்ற ஒன்றுதான். இதை குறைபாடு என்று பார்க்காமல், மாறுபாடு என்று பார்க்கும் பக்குவம் இங்கே வரவில்லை. உங்களைப் போன்ற அரவாணிகளுக்கு மட்டும்தான் வேதனையான நிலை என்பதில்லை; நம்மிலிருந்து மாறுபட்ட தோற்றத்துடன் எது இருந்தாலும், அதைத் தாழ்த்திப் பார்ப்பது நம் பழக்கமாகிவிட்டது. சரும நிறம் மாறினாலே சமூகம் சமமாகப் பார்க்கத் தயாராக இல்லையே! பல நூறு ஆண்டுகளாக மாறுபட்ட இனத்தினரைத் தாழ்த்தி, சித்ரவதைக்கு உள்ளாக்கி, அடிமைகளாக நடத்துவது இந்தப் பூமியில் நடந்தேறி இருக்கிறது. நாகரிகம் வளர்ந்துவிட்டதாகப் பறைசாற்றிக் கொள்ளும் இன்றைய தினத்திலும், வேறுபாடு காரணமாக நிகழும் கொடுமைகள் உலகெங்கும் அரங்கேறிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மூன்று தலைகளுடன் கடவுள் இருப்பதாகச் சொன்னால், மண்டியிட்டு வழிபடத் தயாராக இருப்பவர்கள், இரண்டு தலைகளுடன் மனித உயிர் வந்தால், அதை மேம்பட்ட தோற்றமாகப் பார்க்கத் தயாராக இல்லை. கல்லெறிந்து காயப்படுத்தவே முனைகிறார்கள். உடல் தோற்றம் என்பது ஒருவித வெளிப்பாடுதான். உள்ளிருக்கும் உயிர்த்தன்மையில் எந்த மாற்றமும் இல்லை. தங்களின் உயிர்த்தன்மையை உணர்ந்து கொள்ளாதவர்கள்தான் குறைபாடு உடையவர்கள். இதைப் புரிந்து கொண்ட பக்குவத்துடன் சமூகம் இயங்கினாலே போதும்…. எல்லாம் திருந்திவிடும். |
||||||||
by Swathi on 28 Mar 2014 0 Comments | ||||||||
Tags: திருநங்கை தவறு சத்குரு Being Transgender Wrong Sadhguru | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|