LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திருப்பொன்னூசல் - அருட் சுத்தி

 

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக 
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து 
நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு 
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை 
ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப் 
போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329 
மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத 
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள் 
தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு 
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக் 
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை 
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330 
முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம் 
பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத் 
தன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து 
மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை 
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப் 
பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331 
நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன் 
மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை 
அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள் 
நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து 
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் 
புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332 
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் 
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் 
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை 
ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக் 
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப் 
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333 
மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத் 
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள் 
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித் 
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான் 
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால் 
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334 
உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை 
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே 
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான் 
அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல் 
என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப் 
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335 
கோலவரைக்குடுமி வந்து குவலத்துச் 
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து 
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் 
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை 
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப் 
பூலித் தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336 
தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை 
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி 
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான் 
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட 
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப் 
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337 

 

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக 

ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து 

நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு 

ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை 

ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப் 

போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329 

 

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத 

வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள் 

தேனதங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு 

ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக் 

கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை 

போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330 

 

முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம் 

பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத் 

தன்னீ றெனக்குருளித் தன்கருணை வெள்ளத்து 

மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை 

மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப் 

பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331 

 

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன் 

மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை 

அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள் 

நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து 

துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் 

புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332 

 

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் 

காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் 

நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை 

ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக் 

கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப் 

பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333 

 

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத் 

தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள் 

கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித் 

தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான் 

காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால் 

போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334 

 

உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை 

மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே 

பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான் 

அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல் 

என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப் 

பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335 

 

கோலவரைக்குடுமி வந்து குவலத்துச் 

சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து 

ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் 

சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை 

மாலுக் கரியானை வாயார நாம்பாடிப் 

பூலித் தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336 

 

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை 

தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி 

எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான் 

பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட 

கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப் 

பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.