LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி

 

பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப் 
பேய்த்தார் முகக்குறும் பேதைகுண மாகாமே 
தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தை திருநடஞ்செய் 
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம். 315 
என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான் 
கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய 
குன்றாத சீர்த்தில்லை அம்பலவன்குணம்பரவித் 
துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ. 316 
பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கிச் 
செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம் 
விருப்புற்று வேடனார் சேடெறிய மெய்குளிர்த்தங்கு 
அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 317 
கற்போலும் நெஞ்சங் கசிந்துருகிக் கருணையினால் 
நிற்பானைப் போலஎன நெஞ்சினுள்ளே புகுந்தருளி 
நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன் 
சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ. 318 
நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் 
புலனாய மைந்தனோ டெண்வகையாயப் புணர்ந்துநின்றான் 
உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே 
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 319 
புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் 
தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச் 
சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் 
அத்தன் கருணையிலனால் தோணோக்கம் ஆடாமோ. 320 
தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் 
சாதியும் வேதியன் தாதையனைத் தாளிரண்டுஞ் 
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப் 
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். 321 
மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர் 
வானந் தொழுந்தென்னன் வார்கழலே நினைத்தடியோம் 
ஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே 
ஆனந்த மாகிநின் றாடாமே தோணோக்கம். 322 
எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக் 
கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின் 
எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் 
மன்மிசை மால்பவர் மாண்டனர்காண் தோணோக்கம். 323 
பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத் 
தங்கண் இடந்தான் சேவடிமேல் சாத்தலுமே 
சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு 
எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ. 324 
காமனுடலுயிர் காலன்பற் காய்கதிரோன் 
நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச் 
சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையுந் 
தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ. 325 
பிரமன் அரியென் றிருவருக்கம் பேதைமையால் 
பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க 
அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து 
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 326 
ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் 
பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே 
ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித் 
தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ. 327 
உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும் 
கரைமாண்ட காமப்பெருங்கடலைக் கடத்தலுமே 
இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத் 
துரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ. 328 

 

பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப் 

பேய்த்தார் முகக்குறும் பேதைகுண மாகாமே 

தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தை திருநடஞ்செய் 

கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம். 315 

 

என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான் 

கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய 

குன்றாத சீர்த்தில்லை அம்பலவன்குணம்பரவித் 

துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ. 316 

 

பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கிச் 

செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம் 

விருப்புற்று வேடனார் சேடெறிய மெய்குளிர்த்தங்கு 

அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 317 

 

கற்போலும் நெஞ்சங் கசிந்துருகிக் கருணையினால் 

நிற்பானைப் போலஎன நெஞ்சினுள்ளே புகுந்தருளி 

நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன் 

சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ. 318 

 

நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் 

புலனாய மைந்தனோ டெண்வகையாயப் புணர்ந்துநின்றான் 

உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே 

பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 319 

 

புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் 

தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச் 

சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் 

அத்தன் கருணையிலனால் தோணோக்கம் ஆடாமோ. 320 

 

தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் 

சாதியும் வேதியன் தாதையனைத் தாளிரண்டுஞ் 

சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப் 

பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். 321 

 

மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர் 

வானந் தொழுந்தென்னன் வார்கழலே நினைத்தடியோம் 

ஆனந்தக் கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே 

ஆனந்த மாகிநின் றாடாமே தோணோக்கம். 322 

 

எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக் 

கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின் 

எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் 

மன்மிசை மால்பவர் மாண்டனர்காண் தோணோக்கம். 323 

 

பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத் 

தங்கண் இடந்தான் சேவடிமேல் சாத்தலுமே 

சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு 

எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ. 324 

 

காமனுடலுயிர் காலன்பற் காய்கதிரோன் 

நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச் 

சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையுந் 

தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ. 325 

 

பிரமன் அரியென் றிருவருக்கம் பேதைமையால் 

பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க 

அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து 

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 326 

 

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் 

பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே 

ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித் 

தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ. 327 

 

உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும் 

கரைமாண்ட காமப்பெருங்கடலைக் கடத்தலுமே 

இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத் 

துரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ. 328 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.