LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருவகுப்பு-1. சீர்பாத வகுப்பு

 

உததியிடை கடவுமர கதவருண குலதுரக
வுபலளித கனகரத ...... சதகோடி சூரியர்கள் 1
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
யுகமுடிவின் இருளகல ...... ஒருசோதி வீசுவதும் 2
உடலுமுட லுயிருநிலை பெருதல்பொரு ளெனவுலக
மொருவிவரு மநுபவன ...... சிவயோக சாதனையில் 3
ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி
யுணர்வுவிழி கொடுநியதி ...... தமதூடு நாடுவதும் 4
உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு
முழலுவன பரசமய ...... கலையார வாரமற 5
உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ
வுளபடியை யுணருமவ ...... ரநுபூதி யானதுவும் 6
உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய
வுருவுடைய மலினபவ ...... சலராசி யேறவிடும் 7
உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில்
உறைவதுவு முலைவிலது ...... மடியேன் மனோரதமும் 8
இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர
இமகிரண தருணவுடு ...... பதிசேர் சடாமவுலி 9
இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென
இமையமயில் தழுவுமொரு ...... திருமார்பி லாடுவதும் 10
இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி
றெரிபுகுத வுரகர்பதி ...... அபிஷேக மாயிரமும் 11
எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய
இளையதளர் நடைபழகி ...... விளையாடல் கூருவதும் 12
இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும்
இலகுவெகு கடவிகட ...... தடபார மேருவுடன் 13
இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற
எழுபுவியை யொருநொடியில் ...... வலமாக வோடுவதும் 14
எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழை
யிரலைமரை யிரவுபகல் ...... இரைதேர்க டாடவியில் 15
எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய
இனிதுபயில் சிறுமிவளர் ...... புனமீ துலாவுவதும் 16
முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு
முதுவடவை விழிசுழல ...... வருகால தூதர்கெட 17
முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவை
முடியவரு வதுமடியர் ...... பகைகோடி சாடுவதும் 18
மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு
முறியுமலர் வகுளதள ...... முழுநீல தீவரமும் 19
முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரத
முநிவர்கரு தரியதவ ...... முயல்வார் தபோபலமும் 20
முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு
முககுமர சரணமென ...... அருள்பாடி யாடிமிக 21
மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி
முழுகுவதும் வருகவென ...... அறைகூவி யாளுவதும் 22
முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு
துலகறிய மழலைமொழி ...... கொடுபாடும் ஆசுகவி 23
முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன
முகுளபரி மளநிகில ...... கவிமாலை சூடுவதும் 24
மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு ...... விசையாதி மூலமென 25
வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின்
வகிருமட லரிவடிவு ...... குறளாகி மாபலியை 26
வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய
வளருமுகில் நிருதனிரு ...... பதுவாகு பூதரமும் 27
மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில்
மருகனிசி சரர்தளமும் ...... வருதார காசுரனும் 28
மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி
மறுகிமுறை யிடமுனியும் ...... வடிவேல னீலகிரி 29
மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர
வசனிபயி ரவிகவுரி ...... யுமையாள்த்ரி சூலதரி 30
வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை
வநிதையபி நவையநகை ...... யபிராம நாயகிதன் 31
மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர்
மறையின்முதல் நடுமுடிவின் ...... மணநாறு சீறடியே 32


உததியிடை கடவுமர கதவருண குலதுரகவுபலளித கனகரத ...... சதகோடி சூரியர்கள் 1
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசையுகமுடிவின் இருளகல ...... ஒருசோதி வீசுவதும் 2
உடலுமுட லுயிருநிலை பெருதல்பொரு ளெனவுலகமொருவிவரு மநுபவன ...... சிவயோக சாதனையில் 3
ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகியுணர்வுவிழி கொடுநியதி ...... தமதூடு நாடுவதும் 4
உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவுமுழலுவன பரசமய ...... கலையார வாரமற 5
உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழவுளபடியை யுணருமவ ...... ரநுபூதி யானதுவும் 6
உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதயவுருவுடைய மலினபவ ...... சலராசி யேறவிடும் 7
உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில்உறைவதுவு முலைவிலது ...... மடியேன் மனோரதமும் 8
இதழிவெகு முகககன நதியறுகு தறுகணரஇமகிரண தருணவுடு ...... பதிசேர் சடாமவுலி 9
இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலெனஇமையமயில் தழுவுமொரு ...... திருமார்பி லாடுவதும் 10
இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயிறெரிபுகுத வுரகர்பதி ...... அபிஷேக மாயிரமும் 11
எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடியஇளையதளர் நடைபழகி ...... விளையாடல் கூருவதும் 12
இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும்இலகுவெகு கடவிகட ...... தடபார மேருவுடன் 13
இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதறஎழுபுவியை யொருநொடியில் ...... வலமாக வோடுவதும் 14
எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழையிரலைமரை யிரவுபகல் ...... இரைதேர்க டாடவியில் 15
எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடியஇனிதுபயில் சிறுமிவளர் ...... புனமீ துலாவுவதும் 16
முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடுமுதுவடவை விழிசுழல ...... வருகால தூதர்கெட 17
முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவைமுடியவரு வதுமடியர் ...... பகைகோடி சாடுவதும் 18
மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறுமுறியுமலர் வகுளதள ...... முழுநீல தீவரமும் 19
முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரதமுநிவர்கரு தரியதவ ...... முயல்வார் தபோபலமும் 20
முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறுமுககுமர சரணமென ...... அருள்பாடி யாடிமிக 21
மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவிமுழுகுவதும் வருகவென ...... அறைகூவி யாளுவதும் 22
முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழுதுலகறிய மழலைமொழி ...... கொடுபாடும் ஆசுகவி 23
முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுனமுகுளபரி மளநிகில ...... கவிமாலை சூடுவதும் 24
மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடியமடுநடுவில் வெருவியொரு ...... விசையாதி மூலமென 25
வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின்வகிருமட லரிவடிவு ...... குறளாகி மாபலியை 26
வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடியவளருமுகில் நிருதனிரு ...... பதுவாகு பூதரமும் 27
மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில்மருகனிசி சரர்தளமும் ...... வருதார காசுரனும் 28
மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகிமறுகிமுறை யிடமுனியும் ...... வடிவேல னீலகிரி 29
மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுரவசனிபயி ரவிகவுரி ...... யுமையாள்த்ரி சூலதரி 30
வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதைவநிதையபி நவையநகை ...... யபிராம நாயகிதன் 31
மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர்மறையின்முதல் நடுமுடிவின் ...... மணநாறு சீறடியே 32

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.