திருவையாறு தியாகராஜரின் 172-வது ஆராதனை விழா நிறைவு பெற்றது.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் ஆராதனை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. 172-வது ஆராதனை விழா கடந்த 21ம் தேதி துவங்கியது.
விழாவை இந்துஸ்தானி இசைக்கலைஞர் கோபால கிருஷ்ணன் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தினந்தோறும் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.
காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகளும், நிறைவு நாளில், பஞ்சரத்ன கீர்த்தனையும் நடந்தது.
நிறைவு நாளையொட்டி காலை 8 மணிக்கு தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து அவரது சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது இசைக்கலைஞர்கள் உஞ்சவிருத்தி பஜனை பாடினர்.
ஊர்வலம், தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும் அவரது சமாதியை அடைந்ததும் சமாதியில் அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான கர்நாடக இசைப் பாடகர்கள் பங்கேற்று ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
|