விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர். விஜி சந்தோசம் அவர்கள் "உலகை தமிழால் உயர்த்துவோம்" என்ற நோக்கில் விஜிபி உலகத்தமிழ் அமைப்பு ஒன்றை நிறுவி அதன்மூலம் மொழிக்கு பல சேவைகளை செய்துவருகிறார்கள். விஜிபி உலகத் தமிழ் சங்கம் சிறந்த சிற்பிகளை வைத்து திருவள்ளுவர் சிலையை உருவாக்கி ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை 2005-ல் நடத்திய பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டிற்கு(www.classicaltamil.org) ஆதரவு வழங்கி ஒரு திருவள்ளுவர் சிலையை உருவாக்கி வழங்கினார்கள்.
தமிழ் சங்கத்திற்கு என்று ஒரு நிரந்தர இடம் இல்லாததால், அந்த சிலையை மேரிலாந்தில் உள்ள முருகன் கோவிலில் வைத்து அங்குள்ள தமிழர்கள் போற்றிவருகிறார்கள். திரு. சந்தோசம் அவர்கள் அமெரிக்க பயணத்தில் நவம்பர் 14,2013-ல் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் நடத்திய "குழந்தைகள் தின விழாவில்" கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய திரு சந்தோசம் அவர்கள், போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள். மேலும் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று தாம் வழங்கிய திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு திரும்புகையில், தமிழ்ச் சங்கங்களால் முன்னெடுக்கப்படும் மொழி வளர்ச்சி செயல்களுக்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் என்றும் துணைநிற்கும் என்ற உறுதிமொழியை வழங்கினார்கள்.
|