LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

உலக நாடுகளுக்கு திருவள்ளுவர் சிலை வடித்து வழங்கும் விஜிபி

விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர். விஜி சந்தோசம் அவர்கள் "உலகை தமிழால் உயர்த்துவோம்" என்ற நோக்கில் விஜிபி உலகத்தமிழ் அமைப்பு ஒன்றை நிறுவி அதன்மூலம் மொழிக்கு பல சேவைகளை செய்துவருகிறார்கள். விஜிபி உலகத் தமிழ் சங்கம் சிறந்த சிற்பிகளை வைத்து திருவள்ளுவர் சிலையை உருவாக்கி ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை 2005-ல் நடத்திய  பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டிற்கு(www.classicaltamil.org) ஆதரவு வழங்கி ஒரு திருவள்ளுவர் சிலையை உருவாக்கி வழங்கினார்கள்.

தமிழ் சங்கத்திற்கு என்று ஒரு நிரந்தர இடம் இல்லாததால், அந்த சிலையை  மேரிலாந்தில் உள்ள முருகன் கோவிலில் வைத்து அங்குள்ள தமிழர்கள்  போற்றிவருகிறார்கள். திரு. சந்தோசம் அவர்கள் அமெரிக்க பயணத்தில் நவம்பர் 14,2013-ல் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் நடத்திய "குழந்தைகள் தின விழாவில்" கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய திரு சந்தோசம் அவர்கள், போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள். மேலும் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று தாம் வழங்கிய திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு திரும்புகையில், தமிழ்ச் சங்கங்களால் முன்னெடுக்கப்படும் மொழி வளர்ச்சி செயல்களுக்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் என்றும் துணைநிற்கும் என்ற உறுதிமொழியை வழங்கினார்கள். 

by Swathi   on 18 Nov 2013  1 Comments
Tags: VGP   VG Santhosam   வி.ஜி.சந்தோசம்   திருவள்ளுவர் சிலை           
 தொடர்புடையவை-Related Articles
உலக நாடுகளுக்கு திருவள்ளுவர் சிலை வடித்து வழங்கும் விஜிபி உலக நாடுகளுக்கு திருவள்ளுவர் சிலை வடித்து வழங்கும் விஜிபி
கருத்துகள்
25-Nov-2013 06:37:51 பிரபாகரன் said : Report Abuse
ஐயா நாங்கள் பெங்களூர் கே ஆர் புறத்தில் சிவன் மற்றும் சித்தர் ஆலயம் அமைகின்றோம் ஆலயத்தில் திருவள்ளுவருக்கும் இடம் உண்டு எங்களுக்கும் சிலை வடித்து வழங்கும் படி இறை அன்புடன் பதிவு செய்கின்றோம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.