LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திருவண்டப் பகுதி

 

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் 
அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி 
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் 
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன 
இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் 5 
சிறிய ஆகப் பெரியோன் தெரியின் 
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் 
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய 
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் 
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10 
எறியது வளியின் 
கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும் 
படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை 
காப்போன் காக்கும் கடவுள், காப்பவை 
காப்போன், கரப்பவை கருதாக் 15 
கருத்துடைக் கடவுள், திருத்தகும் 
அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் 
வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி 
கீடம் புரையும் கிழவோன், நாள் தொறும் 
அருக்கனின் சோதி அமைத்தோன், திருத்தகு 20 
மதியில் தண்மை வைத் தோன், திண்திறல் 
தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர் 
வானில் கலப்பு வைத்தோன், மேதகு 
காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ் 
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25 
மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று 
எனைப் பல கோடி எனைப் பல பிறவும் 
அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன். அஃதான்று 
முன்னோன் காண்க, முழுதோன் காண்க 
தன்நேர் இல்லோன் தானே காண்க 30 
ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க 
கானம் புலியுரி அரையோன் காண்க 
நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும் 
ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன் 
இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 35 
அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க 
பரமன் காண்க, பழையோன் காண்க 
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க 
அற்புதன் காண்க, அநேகன் காண்க 
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40 
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க 
பத்தி வலையில் படுவோன் காண்க 
ஒருவன் என்றும் ஒருவன் காண்க 
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க 
அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க 45 
இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க 
அரிய அதில் அரிய அரியோன் காண்க 
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க 
நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க 
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50 
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க 
பந்தமும் வீடும் படைப்போன் காண்க 
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க 
கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க 
யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55 
தேவரும் அறியாச் சிவனே காண்க 
பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க 
கண்ணால் யானும் கண்டேன் காண்க 
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க 
கருணையின் பெருமை கண்டேன் காண்க 60 
புவனியல் சேவடி தீண்டினன் காண்க 
சிவன் என யானும் தேறினன் காண்க 
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க 
குவளைக் கண்ணி கூறன் காண்க 
அவளுந் தானும் உடனே காண்க 65 
பரமா னந்தம் பழம் கட லதுவே 
கருமா முகிலில் தோன்றித் 
திருவார் பெருந்துறை வரையில் ஏறித் 
திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய 
ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70 
வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப 
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர 
எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து 
முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப் 
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75 
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச் 
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக் 
கேதக் குட்டம் கையற வோங்கி 
இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை 
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80 
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் 
அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன 
ஆயிடை வானப் பேரியாற்று அகவயின் 
பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச் 
சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து 85 
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் 
இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து 
உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச் 
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் 
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90 
மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் 
மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி 
அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத் 
தொண்ட உழவர் ஆரத் தந்த 
அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95 
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க 
அரும்தவர்ககு அருளும் ஆதி வாழ்க 
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க 
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க 
சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க 100 
எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க 
கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க 
பேர்அமைத் தோளி காதலன் வாழ்க 
ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க 
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105 
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி 
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி 
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை 
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் 
நிற்பன நிறீஇச் 110 
சொல்பதம் கடந்த தொல்லோன் 
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் 
கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன் 
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன் 
பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115 
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை 
இன்று எனக்கு எளிவந்து அருளி 
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் 
இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி 
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120 
ஊற்றிருந்த துள்ளங் களிப்போன் போற்றி 
ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி 
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் 
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் 
மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத் 125 
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் 
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் 
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து 
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும் 
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130 
இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு 
அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும் 
முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி 
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து 
வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின் 135 
ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த் 
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை 
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் 
ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும் 
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140 
ஒளிfக்கும் சோரனைக் கண்டனம் 
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில் 
தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின் 
தொடர்மின் விடேன்மின் 
பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 145 
தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை 
என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி 
அறைகூவி ஆட்கொண்டருளி 
மறையோர் கோலம் காட்டி அருளலும் 
உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150 
அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கித் 
தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப் 
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து 
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் 
கடைக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின் 155 
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு 
கோற்றேன் கொண்டு செய்தனன் 
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் 
வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெருந் தீயின் 
அடியோம் அடிக்குடில் 160 
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் 
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் 
சொல்லுவது அறியேன் வாழி முறையோ 
தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது 
தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு 165 
அருளியது அறியேன் பருகியும் ஆரேன் 
விழுங்கியும் ஒல்ல கில்லேன் 
செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து 
உவர்க்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப 
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170 
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை 
குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே 
குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய 
அற்புதம் ஆன அமுத தாரைகள் 
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175 
உள்ளம் கொண்டோ ர் உருச்செய் தாங்கு எனக்கு 
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய 
கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை 
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில் 
கருணை வான்தேன் கலக்க 180 
அருளொடு பரா அமுது ஆக்கினன் 
பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே 

 

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் 

அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி 

ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் 

நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன 

இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் 5 

 

சிறிய ஆகப் பெரியோன் தெரியின் 

வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் 

தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய 

மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் 

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10 

 

எறியது வளியின் 

கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும் 

படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை 

காப்போன் காக்கும் கடவுள், காப்பவை 

காப்போன், கரப்பவை கருதாக் 15 

 

கருத்துடைக் கடவுள், திருத்தகும் 

அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் 

வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி 

கீடம் புரையும் கிழவோன், நாள் தொறும் 

அருக்கனின் சோதி அமைத்தோன், திருத்தகு 20 

 

மதியில் தண்மை வைத் தோன், திண்திறல் 

தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர் 

வானில் கலப்பு வைத்தோன், மேதகு 

காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ் 

நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25 

 

மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று 

எனைப் பல கோடி எனைப் பல பிறவும் 

அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன். அஃதான்று 

முன்னோன் காண்க, முழுதோன் காண்க 

தன்நேர் இல்லோன் தானே காண்க 30 

 

ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க 

கானம் புலியுரி அரையோன் காண்க 

நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும் 

ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன் 

இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 35 

 

அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க 

பரமன் காண்க, பழையோன் காண்க 

பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க 

அற்புதன் காண்க, அநேகன் காண்க 

சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40 

 

சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க 

பத்தி வலையில் படுவோன் காண்க 

ஒருவன் என்றும் ஒருவன் காண்க 

விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க 

அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க 45 

 

இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க 

அரிய அதில் அரிய அரியோன் காண்க 

மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க 

நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க 

மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50 

 

அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க 

பந்தமும் வீடும் படைப்போன் காண்க 

நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க 

கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க 

யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55 

 

தேவரும் அறியாச் சிவனே காண்க 

பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க 

கண்ணால் யானும் கண்டேன் காண்க 

அருள்நனி சுரக்கும் அமுதே காண்க 

கருணையின் பெருமை கண்டேன் காண்க 60 

 

புவனியல் சேவடி தீண்டினன் காண்க 

சிவன் என யானும் தேறினன் காண்க 

அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க 

குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க 65 

 

பரமா னந்தம் பழம் கட லதுவே 

கருமா முகிலில் தோன்றித் 

திருவார் பெருந்துறை வரையில் ஏறித் 

திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய 

ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70 

 

வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப 

நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர 

எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து 

முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப் 

பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75 

 

எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச் 

செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக் 

கேதக் குட்டம் கையற வோங்கி 

இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை 

நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80 

 

தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் 

அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன 

ஆயிடை வானப் பேரியாற்று அகவயின் 

பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச் 

சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து 85 

 

ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் 

இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து 

உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச் 

சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் 

வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90 

 

மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் 

மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி 

அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத் 

தொண்ட உழவர் ஆரத் தந்த 

அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95 

 

கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க 

அரும்தவர்ககு அருளும் ஆதி வாழ்க 

அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க 

நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க 

சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க 100 

 

எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க 

கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க 

பேர்அமைத் தோளி காதலன் வாழ்க 

ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க 

காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105 

 

நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி 

பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி 

நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை 

நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் 

நிற்பன நிறீஇச் 110 

 

சொல்பதம் கடந்த தொல்லோன் 

உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் 

கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன் 

விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன் 

பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115 

 

ஒழிவற நிறைந்து மேவிய பெருமை 

இன்று எனக்கு எளிவந்து அருளி 

அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் 

இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி 

அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120 

 

ஊற்றிருந்த துள்ளங் களிப்போன் போற்றி 

ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி 

போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் 

மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் 

மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத் 125 

 

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் 

முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் 

ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து 

உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும் 

மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130 

 

இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு 

அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும் 

முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி 

ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து 

வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின் 135 

 

ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த் 

துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை 

அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் 

ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும் 

பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140 

 

ஒளிfக்கும் சோரனைக் கண்டனம் 

ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில் 

தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின் 

தொடர்மின் விடேன்மின் 

பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 145 

 

தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை 

என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி 

அறைகூவி ஆட்கொண்டருளி 

மறையோர் கோலம் காட்டி அருளலும் 

உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150 

 

அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கித் 

தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப் 

பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து 

நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் 

கடைக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின் 155 

 

ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு 

கோற்றேன் கொண்டு செய்தனன் 

ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் 

வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெருந் தீயின் 

அடியோம் அடிக்குடில் 160 

 

ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் 

தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் 

சொல்லுவது அறியேன் வாழி முறையோ 

தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது 

தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு 165 

 

அருளியது அறியேன் பருகியும் ஆரேன் 

விழுங்கியும் ஒல்ல கில்லேன் 

செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து 

உவர்க்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப 

வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170 

 

தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை 

குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே 

குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய 

அற்புதம் ஆன அமுத தாரைகள் 

எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175 

 

உள்ளம் கொண்டோ ர் உருச்செய் தாங்கு எனக்கு 

அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய 

கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை 

என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில் 

கருணை வான்தேன் கலக்க 180 

அருளொடு பரா அமுது ஆக்கினன் 

பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் 

அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி 

ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் 

நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன 

இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் 5 

 

சிறிய ஆகப் பெரியோன் தெரியின் 

வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் 

தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய 

மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் 

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10 

 

எறியது வளியின் 

கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும் 

படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை 

காப்போன் காக்கும் கடவுள், காப்பவை 

காப்போன், கரப்பவை கருதாக் 15 

 

கருத்துடைக் கடவுள், திருத்தகும் 

அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் 

வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி 

கீடம் புரையும் கிழவோன், நாள் தொறும் 

அருக்கனின் சோதி அமைத்தோன், திருத்தகு 20 

 

மதியில் தண்மை வைத் தோன், திண்திறல் 

தீயில் வெம்மை செய்தோன், பொய்தீர் 

வானில் கலப்பு வைத்தோன், மேதகு 

காலின் ஊக்கம் கண்டோ ன், நிழல் திகழ் 

நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட 25 

 

மண்ணில் திண்மை வைத்தோன், என்று என்று 

எனைப் பல கோடி எனைப் பல பிறவும் 

அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன். அஃதான்று 

முன்னோன் காண்க, முழுதோன் காண்க 

தன்நேர் இல்லோன் தானே காண்க 30 

 

ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க 

கானம் புலியுரி அரையோன் காண்க 

நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும் 

ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன் 

இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 35 

 

அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க 

பரமன் காண்க, பழையோன் காண்க 

பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க 

அற்புதன் காண்க, அநேகன் காண்க 

சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40 

 

சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க 

பத்தி வலையில் படுவோன் காண்க 

ஒருவன் என்றும் ஒருவன் காண்க 

விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க 

அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க 45 

 

இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க 

அரிய அதில் அரிய அரியோன் காண்க 

மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க 

நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க 

மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50 

 

அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க 

பந்தமும் வீடும் படைப்போன் காண்க 

நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க 

கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க 

யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55 

 

தேவரும் அறியாச் சிவனே காண்க 

பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க 

கண்ணால் யானும் கண்டேன் காண்க 

அருள்நனி சுரக்கும் அமுதே காண்க 

கருணையின் பெருமை கண்டேன் காண்க 60 

 

புவனியல் சேவடி தீண்டினன் காண்க 

சிவன் என யானும் தேறினன் காண்க 

அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க 

குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க 65 

 

பரமா னந்தம் பழம் கட லதுவே 

கருமா முகிலில் தோன்றித் 

திருவார் பெருந்துறை வரையில் ஏறித் 

திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய 

ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70 

 

வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப 

நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர 

எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து 

முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப் 

பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75 

 

எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச் 

செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக் 

கேதக் குட்டம் கையற வோங்கி 

இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை 

நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80 

 

தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் 

அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன 

ஆயிடை வானப் பேரியாற்று அகவயின் 

பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்துச் 

சுழித்து எம்பந்தம் மாக் கரைபொருது அலைத்திடித்து 85 

 

ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் 

இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து 

உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச் 

சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் 

வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90 

 

மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் 

மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி 

அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டுத் 

தொண்ட உழவர் ஆரத் தந்த 

அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95 

 

கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க 

அரும்தவர்ககு அருளும் ஆதி வாழ்க 

அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க 

நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க 

சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க 100 

 

எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க 

கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க 

பேர்அமைத் தோளி காதலன் வாழ்க 

ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க 

காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105 

 

நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி 

பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி 

நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை 

நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் 

நிற்பன நிறீஇச் 110 

 

சொல்பதம் கடந்த தொல்லோன் 

உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் 

கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன் 

விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன் 

பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115 

 

ஒழிவற நிறைந்து மேவிய பெருமை 

இன்று எனக்கு எளிவந்து அருளி 

அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் 

இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி 

அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120 

 

ஊற்றிருந்த துள்ளங் களிப்போன் போற்றி 

ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி 

போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் 

மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் 

மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத் 125 

 

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் 

முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் 

ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து 

உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும் 

மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130 

 

இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு 

அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும் 

முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி 

ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து 

வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின் 135 

 

ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த் 

துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை 

அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் 

ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும் 

பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140 

 

ஒளிfக்கும் சோரனைக் கண்டனம் 

ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில் 

தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின் 

தொடர்மின் விடேன்மின் 

பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 145 

 

தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை 

என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி 

அறைகூவி ஆட்கொண்டருளி 

மறையோர் கோலம் காட்டி அருளலும் 

உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150 

 

அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கித் 

தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப் 

பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து 

நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் 

கடைக்களிறு ஏற்றாத் தடம்பெரு மதத்தின் 155 

 

ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு 

கோற்றேன் கொண்டு செய்தனன் 

ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் 

வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெருந் தீயின் 

அடியோம் அடிக்குடில் 160 

 

ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் 

தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் 

சொல்லுவது அறியேன் வாழி முறையோ 

தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது 

தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு 165 

 

அருளியது அறியேன் பருகியும் ஆரேன் 

விழுங்கியும் ஒல்ல கில்லேன் 

செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து 

உவர்க்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப 

வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170 

 

தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை 

குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே 

குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய 

அற்புதம் ஆன அமுத தாரைகள் 

எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175 

 

உள்ளம் கொண்டோ ர் உருச்செய் தாங்கு எனக்கு 

அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய 

கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை 

என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில் 

கருணை வான்தேன் கலக்க 180 

அருளொடு பரா அமுது ஆக்கினன் 

பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.