LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திருவெண்பா - அணைந்தோர் தன்மை

 

வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் 
பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய 
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ 
மருவா திருந்தேன் மனத்து. 617 
ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ 
பார்க்கோ பரம்பரனே என்செய்தேன் தீர்ப்பரிய 
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான் 
தானென்பர் ஆரொருவர் தாழ்ந்து. 618 
செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே 
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத் 
திருந்துறையுள் வேல்மடுத்தன் சிந்தனைக்கே கோத்தான் 
பெருந்துறையில் மேய பிரான். 619 
முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான் 
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன் 
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன் 
வருந்துயரந் தீர்க்கும் மருந்து. 620 
அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற 
மறையோனும் மாலுமால் கொள்ளும் இறையோன் 
பெருந்துறையும் மேய பெருமான் பிரியா 
திருந்துறையும் என்னெஞ்சத் தின்று. 621 
பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம் 
மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை அத்தன் 
பெருந்துறையாள் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும் 
மருந்திறவாப் பேரின்பம் வந்து. 622 
வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி 
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார் 
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய 
ஒருத்தன் பெருக்கும் ஒளி. 623 
யாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் 
யாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும் 
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான் 
மற்றறியேன் செய்யும் வகை. 624 
மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த 
தேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி 
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க 
மெய்யகத்தே இன்பம் மிகும். 625 
இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித் 
திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் தருங்காண் 
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன் 
மருந்துருவாய் என்மனத்தே வந்து. 626 
இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும் 
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச் 
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே 
ஊராகக் கொண்டான் உவந்து. 627 

 

வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் 

பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய 

திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ 

மருவா திருந்தேன் மனத்து. 617 

 

ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ 

பார்க்கோ பரம்பரனே என்செய்தேன் தீர்ப்பரிய 

ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான் 

தானென்பர் ஆரொருவர் தாழ்ந்து. 618 

 

செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே 

உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத் 

திருந்துறையுள் வேல்மடுத்தன் சிந்தனைக்கே கோத்தான் 

பெருந்துறையில் மேய பிரான். 619 

 

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான் 

பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன் 

பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன் 

வருந்துயரந் தீர்க்கும் மருந்து. 620 

 

அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற 

மறையோனும் மாலுமால் கொள்ளும் இறையோன் 

பெருந்துறையும் மேய பெருமான் பிரியா 

திருந்துறையும் என்னெஞ்சத் தின்று. 621 

 

பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம் 

மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை அத்தன் 

பெருந்துறையாள் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும் 

மருந்திறவாப் பேரின்பம் வந்து. 622 

 

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி 

ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார் 

திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய 

ஒருத்தன் பெருக்கும் ஒளி. 623 

 

யாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் 

யாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும் 

பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான் 

மற்றறியேன் செய்யும் வகை. 624 

 

மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த 

தேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி 

வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க 

மெய்யகத்தே இன்பம் மிகும். 625 

 

இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித் 

திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் தருங்காண் 

பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன் 

மருந்துருவாய் என்மனத்தே வந்து. 626 

 

இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும் 

துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச் 

சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே 

ஊராகக் கொண்டான் உவந்து. 627 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.