LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

இது எங்கள் உணவு

மாலாவுக்கு எதையாவது சாப்பிடணும் போல இருந்தது. அவள் சமையல்க்கட்டுப் போனாள். அங்கே மூடி வைத்த நிறையப் பாத்திரங்கள் இருந்தது. அவள் அதை

ஒவ்வொண்ணாத் திறந்து பார்த்தாள். அதில் எதுவும் இருக்கவில்லை. கடைசியா ஒரு பாத்திரத்தை எடுத்தாள். அது நல்ல இறுகி மூடியிருந்தது. அந்தப் பாத்திரத்தோட மூடியைப் பலமாத் திறந்து பார்த்தபோது அவளோட முகம் மலர்ந்தது.

 

ஆமா. அதில் சீனி இருந்தது. சீனிண்ணா சீனி அதையாவது சாப்பிடுவோம் அப்படீண்ணு கொஞ்சம் எடுத்து வாயிலிட்ட மாலா ஒரு நொடியில் ஆ ஐய்யோ

கத்த ஆரம்பிம்பித்து விட்டாள். அவள் மறுபடியும் பாத்திரத்தை எடுத்துக் கவனமாப் பார்த்தபோதுதான் அதில் எறும்புகள் இருக்கிறது தெரிந்தது. பாத்திரம் இருந்த

இடத்துக்கு எங்கிருந்தோ எறும்பகள் வரிசையா வந்திட்டிருந்துச்சு. நாலஞ்சு எறும்புகள் அவளோட நாக்கில் கடிச்சு வச்சிருச்சு. அவளுக்கு வலி எடுத்தது. வலி எடுக்க எடுக்க கூடவே கோபமும் வந்தது.

 

"ஏய் எறும்புகளா, என்னை கடிச்சு வச்சிட்டீங்கல்ல உங்களை கொல்லாமல் விடமாட்டேன் பாருங்க...'' அப்படீண்ணு சொல்லி சுத்தும்முத்தும்

பார்த்தாள். அங்க ஒரு தீப்பெட்டி இருந்தது. அதை கையில் எடுத்தவள் ஒரு நிமிடம் யோசித்தாள்... ஐயோ சமையல் கட்டில் ஏரிவாயு இருக்கு. தீப்பிடிச்சிருச்சுண்ணா வெடிச்சிரும் வேண்டாம்ணு சொல்லி தீப்பெட்டியை கீழே வச்சிட்டு வீட்டுக்குப் பின்னாடி ஓடினாள்.

 

அங்க ஒரு இடத்தில் எறும்பு பொடிப் பொட்டலம் இருந்தது . அந்தப் பொட்டலத்தைக் கையில் எடுத்தாளோ இல்லையோ அச் அச்ணு தும்மத்

தொடங்கீட்டாள்.

 

ஐய்யய்யோ இது கையில் எடுத்தவுடனே தும்மினா இதை சமையலறையில் துவினா என்ன ஆகறது... வேண்டாம் என்று சொல்லீட்டு  அந்தப் பொட்டலத்தை அங்கேயே வைத்தால். மறுபடியும் சமையல் அறைக்கே வந்தாள். அங்கே ஒரு குப்பியில் கொஞ்சம் மண்ணெண்ணெய் இருந்தது. ஆமா இதை எறும்பு மேல் ஊத்தினா எல்லா எறும்பும் செத்துப்போயிரும். அப்படீண்ணு சொல்லீட்டு அந்தக் குப்பியைக் கையிலெடுத்தாள்.

 

வ்வே... என்ன இது இப்படி நாறுது... இத சமையல் கட்டில் ஊத்தினா நாலு நாளானாலும் நாற்றம்போகாதப்பா அப்படீண்ணூ சொல்லிட்டு

அதையும் அங்கேயே வைத்தால்.

 

எறும்பு கடிச்சது இன்னும் வலிக்குதே அதுகளை கொல்லாமல் விடக்கூடாது என்ன பண்ணலாம். அவ தீவிரமா யோசித்தால். இங்... அதுதான் சரியான வழி. எறும்புகளும் சாகும். சமையலறையும் சுத்தமாகும். தண்ணியை நல்லா கொதிக்க வைத்து அதுக மேல ஊத்தினா போதும். மாலா வேகவேகமா ஒரு பாத்திரத்தில் தண்ணியெடுத்து அடுப்பு மேல வைத்தாள்..

 

மாலா... மாலா... அப்படீண்ணு யாரோ கூப்பிடற சத்தம் கேட்டது. அவள் வெளியே வந்து பார்த்தாள் அங்கே யாருமேயில்லை. மறுபடியும் அடுப்பைப் பற்ற வைக்கப் போனாள் அப்போ மறுபடியும் மாலா மாலாண்ணு யாரோ கூப்பிடற சத்தம் கேட்டது. அவள் கூர்ந்து பார்த்த போது அவளோட கையில் ஒரு எறும்பு தலையைத் தூக்கிட்டு நிக்குது ஏய் என்னை மறுபடியும் கடிக்கப்போறயா... மாலா என்ன கொல்லறதுக்கு முன்னாடி என் கேள்விக்குப் பதில் சொல்லிட்டு கொன்று க்கோ... அப்படீண்ணு எறும்பு பேசியது.

 

ஒ நீதான் என்ன கூப்பிட்டியா? சரி நீ என்ன கேள்வி கேட்கப் போற கேளு நான் பதில் சொல்றேன் மாலா எறும்புகிட்டே பேசினால்.

 

நீ ஏன் எங்க சாப்பாட்டை எடுத்தே... எறும்பு கேள்வி கேட்டது.

 

என்னது எங்கம்மா வாங்கிட்டு வந்தா சீனி உங்க சாப்பாடா? எங்கம்மா

 

எங்களுக்குக்காக வாங்கிட்டு வந்த சீனி எப்படி உங்க சாப்பாடாகும்? மாலா

 

எதிர்க்கேள்வி கேட்டாள்.

 

சரி நான் வரிசையா கேள்வி கேட்டுக்கிட்டே வர்றேன் நீ பதில் சொல்கிட்டே வா பார்ப்போம். கடைசியில் யார் ஜெயிக்கிறாங்கண்ணு பார்த்திருவோம் அப்படீண்ணு சொல்லிட்டு எறும்பு வரிசையா கேள்வி கேட்கத் தொடங்கியது.

 

உங்க அம்மாவுக்கு எங்கிருந்து சீனி கிடைத்தது.

 

கடையிலிருந்து.

 

கடைக்கு எப்படி சீனி வந்தது

 

கரும்பாலையிருந்து

 

கரும்பாலைக்கு எங்கிருந்து சீனி வந்தது?

 

கரும்பு வயல்லிருந்து

 

வயலில் கரும்பு விளையணும்ணா என்னென்ன வேணும்?

 

தண்ணீர் வேணும், காற்று வேணும் ,வெளிச்சம் வேணும்.

 

தண்ணீர், காற்று வெளிச்சம் எல்லாம் உனக்கு மட்டுமா சொந்தமா?

 

இல்லை எல்லாருக்கும் சொந்தம்தான்

 

எல்லாருக்கும் சொந்தம்ணா எங்களுக்கும் சொந்தம்தானே?

 

ஆமாம் உங்களுக்குதான்... மாலா மெதுவாகச் சொன்னா. எறும்பு அவளை கேள்வி

 

கேட்டு மடக்குதுங்கிறது மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது.

 

எங்களுக்கும் சொந்தமானதைப் பயன்படுத்தி விளையுற கரும்புல எங்களுக்கும் ஒரு பங்கு தரவேண்டாமா? அந்தப் பங்குதான் இந்தச் சீனிண்ணு நினைத்துகோ.

 

இதுக்கு மேலயும் உனக்கு எங்களைக் கொல்லணும்ணு தோன்றினால் கொன்றுவிடு...

 

எறும்பு சொல்லிநிறுத்தியது.

 

நான் ஒரு பெரிய பாவம் செய்யப்போனேன். நீதான் என்ன தடுத்திட்டே. நீ எவ்வளவு புத்திசாலியா இருக்கே.

 

நீ எங்களை முட்டாள்கள்ணு நினைத்தால் அதுக்கு நாங்க பொறுப்பில்லையே...

 

இனி ஒருநாளும் இந்த மாலா உங்களைக்கொல்ல மாட்டாள். அதுமட்டுமல்ல நா சாப்பிடற சாப்பாட்டில் ஒரு பகுதியை உங்களுக்கும் தருகிறேன். சரியா..

நீ ரொம்ப நல்ல பொண்ணு'" எறும்பு அவளைப் பாராட்டியது.

by Swathi   on 11 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.