LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

தொழிலாளர் தினக் கவிதை - கவிப்புயல் இனியவன்

உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....

உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....

உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....

ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....

உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....!


களைப்பில் உழைப்பின் முதுகு ....

கேள்விக்குறியாய் வளைந்தது ....

சளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....

அடக்கப்பட்டனர், ஒதுக்கபட்டனர் ....

திருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....!
 

தூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....

திரட்டி கொண்டனர் தம்பலத்தை .....

நுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....

நிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....

வெடித்தது தொழிலாளர் போராட்டம் .....!


நோக்கம் நிறைவேறும்வரை ......

உக்கிரமானது சர்வதேசப் புரட்சி......

உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....

உழைக்கும் நேரம் எட்டுமணியாக .....

உரிமையை போராடி வென்றனர்.....!


போராடி வென்ற தொழிலாளர் தினம் .....

பேச்சளவில் இன்று சட்டத்திலும் ...

சிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...

மனத்தால் உழைப்பின் புனிதத்தை ...

உணரும் நாள் என்று உதயமாகிறதோ ....

அன்றே உண்மைதொழிலாளர் தினம் ......!

 

- கவிப்புயல் இனியவன்

by Swathi   on 07 May 2017  0 Comments
Tags: May Day Kavithai   May Day   May Dhinam   தொழிலாளர் தினக் கவிதை   Tholilalar Thinam        
 தொடர்புடையவை-Related Articles
தொழிலாளர் தினக் கவிதை - கவிப்புயல் இனியவன் தொழிலாளர் தினக் கவிதை - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.