LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

தோல்வியில் துவளாத தூயவர்

1967 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காமராசர் இந்தியா முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . ஒவ்வொரு மாநிலத்திலும் போருளாதார நிலையை எடுத்துச்சொன்னார் . தலைவர் அகில இந்திய காங்கிரஸின் தலைவராக இருந்த போதுதான் அசோக் மேத்தா காங்கிரசுக்கு வந்தார் . தேர்தலில் பெருந்தலைவர் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் .

பிரச்சாரத்துக்காக தலைவர் திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கார் விபத்து ஏற்பட்டு அதில் அவருக்கு பலத்த அடி ஏற்பட்டது . எல்லோரும் திருநெல்வேலி நோக்கிச்சென்று பார்த்தபோது தலைவர் தேர்தல் நிலைமை பற்றியே விசாரித்தார் .

தமிழ்நாட்டில் உருவாகியிருந்த கடுமையான அரிசிப் பஞ்சம் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது . விருதுநகர் தொகுதியில் சுமார் 500 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றது .

இந்தத் தேர்தல் முடிவு இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கியது . காமராசர் பெற்ற முதலும் கடைசியுமான தோல்வி கண்டு இந்திய மக்கள் அதிர்ச்சியடைந்தனர் .

“ காங்கிரசுக்குக் கிடைத்த தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன் . மக்கள் தீர்ப்பை நான் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன் . மக்களின் நம்பிக்கைகளைப் பெற மீண்டும் நாம் கடுமையாக உழைப்போம் ” என்று பெருந்தலைவர் தோல்வியைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார் .

“ காமராசர் போன்ற பெருந்தலைவர்கள் தோற்கும் நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது ” என்று தமிழகத்தில் வெற்றி பெற்ற தி . மு . க . தலைவர் சி . என் . அண்ணாத்துரையே கூறினார் . நேராக தன் நண்பர்களுடன் காமராசர் வீட்டுக்கு வந்து அவர் ஆசியும் பெற்றார் . அரசியலில் எதிர் அணியில் உள்ளவர்களையும் கவரக் கூடியவர் காமராசர் .

by Swathi   on 03 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.