LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

தொப்பி சப்பாத்துச் சிசு

 

தொப்பி
காற்சட்டை சப்பாத்து
இடுப்பில் ஒரு கத்தி 
மீசை
அனைத்தோடும் பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து 
குதிக்கின்ற ஒருகாலம் வரும்.
அந்த
தொப்பி சப்பாத்துச் சிசுக்களின் காலத்தில்
பயிர்பச்சை கூட இப்படியாய் இருக்காது.
எல்லாம் 
தருணத்தில் ஒத்தோடும்.
சோளம் மீசையுடன் நிற்காது.
மனிதனைச் சுட்டுப் புழுப்போல குவிக்கின்ற
துவக்கை ஓலைக்குள் மறைத்துவைத்து ஈனும்.
வெள்ளை சிவப்பு
இளநீலம் மஞ்சள்
என்று கண்ணுக்குக் குளிர்த்தியினைத் தருகின்ற
பூமரங்கள் கூட
சமயத்திற்கொத்தாற்போல் துப்பாக்கிச் சன்னத்தை
அரும்பி அரும்பி
வாசலெல்லாம் சும்மா தேவையின்றிச் சொரியும். 
குண்டு குலைகுலையாய் தென்னைகளில் தொங்கும்
இளநீர் எதற்கு?
மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்ற
தலைமுறைக்குள் சீவிக்கும்,
கொய்யா முள்ளாத்தை
எலுமிச்சை அத்தனையும்
நீருறுஞ்சி இப்போது காய்க்கின்ற பச்சைக்காய்
இரத்தம் உறுஞ்சும் அந்நேரம் காய்க்காது. 
வற்றாளைக் கொடி நட்டால்
அதில் விளையும் நிலக்கண்ணி
வெண்டி வரைப்பீக்கை
நிலக்கடலை தக்காளி
எல்லா உருப்படியும் சதை கொட்டை இல்லாமல்,
முகர்ந்தால் இறக்கும்
நச்சுப் பொருளாக
எடுத்தால் அதிரும்
தெருக்குண்டு வடிவாக
உண்டாகிப் பிணமுண்ணும் பேய்யுகத்தை வழி நடத்த...
உள்ளியும் உலுவாவும் சமைத்துண்டு ருசிபார்க்கும்
மனிதர் எவரிருப்பார்?
கடுகு பொரித்த வாசம்தான் கிளம்புதற்கும்
ஆட்கள் அன்றிருக்கார்!
இவர்கள்
பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவகைப்
புராதன மனிதர்களாய் போவர். 

 

தொப்பி

காற்சட்டை சப்பாத்து

இடுப்பில் ஒரு கத்தி 

மீசை

அனைத்தோடும் பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து 

குதிக்கின்ற ஒருகாலம் வரும்.

 

அந்த

தொப்பி சப்பாத்துச் சிசுக்களின் காலத்தில்

பயிர்பச்சை கூட இப்படியாய் இருக்காது.

எல்லாம் 

தருணத்தில் ஒத்தோடும்.

 

சோளம் மீசையுடன் நிற்காது.

மனிதனைச் சுட்டுப் புழுப்போல குவிக்கின்ற

துவக்கை ஓலைக்குள் மறைத்துவைத்து ஈனும்.

 

வெள்ளை சிவப்பு

இளநீலம் மஞ்சள்

என்று கண்ணுக்குக் குளிர்த்தியினைத் தருகின்ற

பூமரங்கள் கூட

சமயத்திற்கொத்தாற்போல் துப்பாக்கிச் சன்னத்தை

அரும்பி அரும்பி

வாசலெல்லாம் சும்மா தேவையின்றிச் சொரியும். 

 

குண்டு குலைகுலையாய் தென்னைகளில் தொங்கும்

இளநீர் எதற்கு?

மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்ற

தலைமுறைக்குள் சீவிக்கும்,

கொய்யா முள்ளாத்தை

எலுமிச்சை அத்தனையும்

நீருறுஞ்சி இப்போது காய்க்கின்ற பச்சைக்காய்

இரத்தம் உறுஞ்சும் அந்நேரம் காய்க்காது. 

 

வற்றாளைக் கொடி நட்டால்

அதில் விளையும் நிலக்கண்ணி

வெண்டி வரைப்பீக்கை

நிலக்கடலை தக்காளி

எல்லா உருப்படியும் சதை கொட்டை இல்லாமல்,

 

முகர்ந்தால் இறக்கும்

நச்சுப் பொருளாக

எடுத்தால் அதிரும்

தெருக்குண்டு வடிவாக

உண்டாகிப் பிணமுண்ணும் பேய்யுகத்தை வழி நடத்த...

 

உள்ளியும் உலுவாவும் சமைத்துண்டு ருசிபார்க்கும்

மனிதர் எவரிருப்பார்?

கடுகு பொரித்த வாசம்தான் கிளம்புதற்கும்

ஆட்கள் அன்றிருக்கார்!

 

இவர்கள்

பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவகைப்

புராதன மனிதர்களாய் போவர். 

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.