|
||||||||
தொப்பி சப்பாத்துச் சிசு |
||||||||
தொப்பி
காற்சட்டை சப்பாத்து
இடுப்பில் ஒரு கத்தி
மீசை
அனைத்தோடும் பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து
குதிக்கின்ற ஒருகாலம் வரும்.
அந்த
தொப்பி சப்பாத்துச் சிசுக்களின் காலத்தில்
பயிர்பச்சை கூட இப்படியாய் இருக்காது.
எல்லாம்
தருணத்தில் ஒத்தோடும்.
சோளம் மீசையுடன் நிற்காது.
மனிதனைச் சுட்டுப் புழுப்போல குவிக்கின்ற
துவக்கை ஓலைக்குள் மறைத்துவைத்து ஈனும்.
வெள்ளை சிவப்பு
இளநீலம் மஞ்சள்
என்று கண்ணுக்குக் குளிர்த்தியினைத் தருகின்ற
பூமரங்கள் கூட
சமயத்திற்கொத்தாற்போல் துப்பாக்கிச் சன்னத்தை
அரும்பி அரும்பி
வாசலெல்லாம் சும்மா தேவையின்றிச் சொரியும்.
குண்டு குலைகுலையாய் தென்னைகளில் தொங்கும்
இளநீர் எதற்கு?
மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்ற
தலைமுறைக்குள் சீவிக்கும்,
கொய்யா முள்ளாத்தை
எலுமிச்சை அத்தனையும்
நீருறுஞ்சி இப்போது காய்க்கின்ற பச்சைக்காய்
இரத்தம் உறுஞ்சும் அந்நேரம் காய்க்காது.
வற்றாளைக் கொடி நட்டால்
அதில் விளையும் நிலக்கண்ணி
வெண்டி வரைப்பீக்கை
நிலக்கடலை தக்காளி
எல்லா உருப்படியும் சதை கொட்டை இல்லாமல்,
முகர்ந்தால் இறக்கும்
நச்சுப் பொருளாக
எடுத்தால் அதிரும்
தெருக்குண்டு வடிவாக
உண்டாகிப் பிணமுண்ணும் பேய்யுகத்தை வழி நடத்த...
உள்ளியும் உலுவாவும் சமைத்துண்டு ருசிபார்க்கும்
மனிதர் எவரிருப்பார்?
கடுகு பொரித்த வாசம்தான் கிளம்புதற்கும்
ஆட்கள் அன்றிருக்கார்!
இவர்கள்
பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவகைப்
புராதன மனிதர்களாய் போவர்.
தொப்பி காற்சட்டை சப்பாத்து இடுப்பில் ஒரு கத்தி மீசை அனைத்தோடும் பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து குதிக்கின்ற ஒருகாலம் வரும்.
அந்த தொப்பி சப்பாத்துச் சிசுக்களின் காலத்தில் பயிர்பச்சை கூட இப்படியாய் இருக்காது. எல்லாம் தருணத்தில் ஒத்தோடும்.
சோளம் மீசையுடன் நிற்காது. மனிதனைச் சுட்டுப் புழுப்போல குவிக்கின்ற துவக்கை ஓலைக்குள் மறைத்துவைத்து ஈனும்.
வெள்ளை சிவப்பு இளநீலம் மஞ்சள் என்று கண்ணுக்குக் குளிர்த்தியினைத் தருகின்ற பூமரங்கள் கூட சமயத்திற்கொத்தாற்போல் துப்பாக்கிச் சன்னத்தை அரும்பி அரும்பி வாசலெல்லாம் சும்மா தேவையின்றிச் சொரியும்.
குண்டு குலைகுலையாய் தென்னைகளில் தொங்கும் இளநீர் எதற்கு? மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்ற தலைமுறைக்குள் சீவிக்கும், கொய்யா முள்ளாத்தை எலுமிச்சை அத்தனையும் நீருறுஞ்சி இப்போது காய்க்கின்ற பச்சைக்காய் இரத்தம் உறுஞ்சும் அந்நேரம் காய்க்காது.
வற்றாளைக் கொடி நட்டால் அதில் விளையும் நிலக்கண்ணி வெண்டி வரைப்பீக்கை நிலக்கடலை தக்காளி எல்லா உருப்படியும் சதை கொட்டை இல்லாமல்,
முகர்ந்தால் இறக்கும் நச்சுப் பொருளாக எடுத்தால் அதிரும் தெருக்குண்டு வடிவாக உண்டாகிப் பிணமுண்ணும் பேய்யுகத்தை வழி நடத்த...
உள்ளியும் உலுவாவும் சமைத்துண்டு ருசிபார்க்கும் மனிதர் எவரிருப்பார்? கடுகு பொரித்த வாசம்தான் கிளம்புதற்கும் ஆட்கள் அன்றிருக்கார்!
இவர்கள் பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவகைப் புராதன மனிதர்களாய் போவர்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|