|
|||||
தூத் பேடா |
|||||
தேவையானவை : பால் - 1 லிட்டர் சர்க்கரை - அரை கிலோ கார்ன் ஃப்ளோர் - 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடி- அரை டீஸ் ஸ்பூன் முந்திரி - 10 செய்முறை : 1.ஒரு பாத்திரத்தில் பாலை நன்கு சுண்டி, மூன்றில் ஒரு பாகமாக வற்றும் வரை காய்ச்சவும்.. 2.கார்ன் ஃப்ளோரை ஒரு டேபிள்ஸ்பூன் குளிர்ந்த பாலில் கலந்து அதில் சேர்க்கவும். 3.விடாமல் கிளறவும்.மாவு வெந்ததும், சர்க்கரையைச் சேர்க்கவும். 4.அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறவும்.சர்க்கரை நன்றாகப் வந்ததும் இறக்கி, ஏலக்காய் பொடியைக் கலந்து பாத்திரத்திலேயே வைத்திருக்கவும். 5சிறிது நேரத்தில் இறுகத் தொடங்கும். அப்பொழுது உருண்டைகளாக பிடிக்கவும் 6.ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, தூத் பேடா வடிவில் அமுக்கி விட்டு, நறுக்கின முந்திரி துண்டை வைத்து அழுத்தவும். |
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|