LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர்

துருப்பிடித்த சாதி – அதுதிருத்திடாத நீதி,
துண்டுத் துண்டாகி - இன்று
உயிர்களை குடிக்கிறது சாதி..

தலைமுறையில் பாதி – அது
கொன்று கொன்று விழுவதேது நீதி ?
காதல்சருகுகளை பிஞ்சுகளைக் கொன்று
கடும் விசமாய் பரவுகிறது சாதி..
 
கருப்பு வெள்ளையில்லா
ஒரே சிவப்பு ரத்தம், அது சிந்திச் சிந்தி
நனைகிறது பூமி, செத்துமடிபவர் கீழேனில்
சாகடிப்பவரை மேலென்னுமா சாதி ?

ச்சீ.. கேட்கவே வெட்கம்
செங்கல் வேகலாம், சாதியில் மனிதர் வேகலாமா?
செந்நீர் வகைக்குப் பிரியலாம்
மனிதர் மேல் கீழாய் பிரியலாமா ?

சுத்தும் பூமிக்கு; யார் மேல் ? யார் கீழ்?
புயலோ பூகம்பமோ வந்தால்
சாவதற்கு’ பெரியார் யார்? சிறியார் யார்?
பிணம். அத்தனையும் ஒரே பிணம்.,

சுடுகாட்டில் எரிப்பதற்கும் நடுக்காட்டில் புதைப்பதற்கும்
பழக்கங்கள் வேறாகலாம், புதைக்கும் எரிக்கும்
மனிதர்களுக்கு அதே இரண்டு கால்கள் கைகளெனில்
வகைக்குப் பிரித்த சாதியெங்கே உயர்ந்தும் தாழ்ந்தும்போனது ?

மனிதரை மிஞ்சிய தெய்வமில்லை
எனும்போது' யாருக்கு உரிமையிங்கே
சாதியினால் கொல்வதற்கும், சாதிப் பேர் சொல்லி
வென்றதாய் எண்ணுவதற்கும் ?

மலமள்ளியவன் படித்த மருத்துவத்தில்
ஒரு உயிர் பிழைத்தால், மருத்துவன் சாமி;
படித்தவன் புத்தி பரத்தையின்பின் போனால்
அது அறிவிற்குக் கேடு;

அடிப்பதும்' அணைப்பதும்' வெல்வதும்' தோற்பதும்'
வாழ்வதும்' சாவதும்' மனிதர்களே மனதால் மனிதத்தால்
திறமையால் தீர்மாணிக்கப்படட்டும்; 
பிறப்பால் எவரையும் இழுக்கென்று பழித்தல் தீது..,

உருகும் மனசு' இளகும் நெஞ்சு'
சாதிநெருப்பள்ளி வைக்கும் தலை – நாம்
வயிறுதள்ளிப் பெற்றதும் வாயைக்கட்டி வளர்த்ததுமெனில்
சாதிக்கினியிடும் நெருப்பெங்கே சடுதியிலிடுவீர்..

சடுதியிலிடுவீர்..

by Swathi   on 24 Aug 2015  0 Comments
Tags: Jathi Matham Kavithai   Jathi Kavithai   ஜாதி   ஜாதி மதம் கவிதை   ஜாதி கவிதை   வித்யாசாகர்   வித்யாசாகர் கவிதைகள்  
 தொடர்புடையவை-Related Articles
வாழையடி வாழையாய் வாழையடி வாழையாய்
சாதி மறு; சண்டையொழி.. வித்யாசாகர்! சாதி மறு; சண்டையொழி.. வித்யாசாகர்!
மகளெனும் கடல்.. வித்யாசாகர்! மகளெனும் கடல்.. வித்யாசாகர்!
மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்! மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்!
ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர் ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர்
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!
தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர் தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர்
ஒரு கண்ணாடி இரவில்.. - வித்யாசாகர்! ஒரு கண்ணாடி இரவில்.. - வித்யாசாகர்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.