LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

காஷ்மீரில் 3 போலீசார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

காஷ்மீரில் 3 போலீசாரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். இதனால் காஷமீரில்  பதட்டம் நிலவுகிறது. 

காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வந்த போதிலும் தீவிரவாதிகளின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. தற்போது போலீசாரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். 

போலீஸ் துறையில் பணியாற்றுவோர் ராஜினாமா செய்ய வேண்டும் என சில நாட்களாக தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.  ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதியான ரியாஸ் நாய்கோ உள்ளூர் போலீசார், குறிப்பாக சிறப்பு காவல் படை அதிகாரிகள் பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்களை எச்சரித்து வீடியோ வெளியிட்டு வருகிறான்.  கடந்த 30ம் தேதி போலீஸ் துறையில் பணியாற்றி வருவோரின் குடும்பங்களை சேர்ந்த 8  பேரை தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். பின்னர் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  

இந்த கடத்தல் சம்பவத்துக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி ரியாஸ் நாய்கோ  பொறுப்பேற்று 12 நிமிட வீடியோவை வெளியிட்டு இருந்தான். 

இந்த நிலையில் காஷ்மீரில்,  சோபியான் மாவட்டத்தை சேர்ந்த கப்ரான், ஹிபோரா கிராமங்களைச் சேர்ந்த 2 போலீசாரை  தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இதேபோல், படாகந்த் கிராமத்தில் ஒரு போலீசை தீவிரவாதிகள் வாகனத்தில் கடத்தினர். அப்போது, கிராம மக்கள் அவர்களை விரட்டிச் சென்று கடத்தப்பட்டவரை விடுவிக்கும்படி வலியுறுத்தியும் கேட்கவில்லை.

வானத்தை நோக்கி சுட்டு பொதுமக்களை மிரட்டிய அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர். ஆற்றைக் கடந்த அவர்கள் தாங்கள் கடத்திய 3 போலீசாரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். 
இந்நிலையில், கொல்லப்பட்ட 3 போலீசாரின் சடலங்களும் கிராமத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது. 

கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக வீட்டில் இருந்து போலீசாரை கடத்தி சென்று சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.  குற்றவாளிகளைத் தேடும் பணியில் பாதுகாப்பு படைகள் ஈடுபட்டுள்ளன.

by Mani Bharathi   on 22 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.