LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!! - கவிப்புயல் இனியவன்

வாழ்க்கையில்...
நடந்து வந்தபாதையை  
திரும்பி பார்க்கிறேன்
வாழ்ந்த காலத்தில்
வாசமும் இருந்தன
துர் நாற்றமும் இருந்தன
வலிகளும் இருந்தன
துடிப்புகளும் இருந்தன ....!!!

பாசத்தோடு உறவாடிய உறவுகள்....
பாசத்தை ஒரு முகமூடியாய்
அணிந்து உறவாடிய உறவுகள்.....
தோள் கொடுக்கும் நண்பர்கள்....
தோன்றியதை சுருட்டிய நண்பர்கள் ...!!!

கண்ட இடத்திலே கைகுலுக்கி
இவன் ஏதும் உதவி கேட்டிடகூடாது
என்று எங்கும் உறவுகள் .....
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை உறவுகள்
இப்படியே ஏராளம்.....!

பிறந்த உடன் பிறப்புக்களை
சொல்லாமல் விடுவேனா ..?
பேசி திருமணம் செய்த அக்கா
குடும்பம் பாசத்தில் இமயம்
பாசத்தின் இமயத்தில் கொடுத்த
சீர்வரிசை .....!!!

ஓடிப்போய் திருமணம் செய்த
தங்கையின் குடும்பத்தில்
பாசத்தை காணோம் ...
கொடுத்தால் தானே பாசம் வர ...!!!

தான் மட்டும் வாழ்க்கையில்
உயர்ந்திட நினைக்கும் தம்பியின்
குடும்பம் ....!!!

தங்களை விட உயர்ந்திட  கூடாது
என்பதில் மிக கவனமாக இருக்கும்
அண்ணியின் குடும்பம் ....
சற்று உயந்தால் என் மனைவியின்
குறையை குத்திக்காட்டும் அண்ணி
இப்படியே ஏராளம்.......!!!

இத்தனையை பார்த்துகொண்டு
பேசவும் முடியாமல் -நியாயத்தை
சொல்லாவும் முடியாமல்
இன்றோ நாளையோ என்று
ஏங்கிகொண்டிருக்கும் பெற்றோர்
அக்காவின் வீட்டில் வசிக்கும்
உயிர்கள் .....!!!

இத்தனை துயரங்களுக்கும்
அவர்கள் தான் காரணம் என்று
சொல்லிவிட மாட்டேன் ...
எனது பங்கு என்ன என்பதை
அறியாமலும் இல்லை ...
மனதுக்குள் வெந்து துடிக்கும்
எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!

 

 

- கவிப்புயல் இனியவன்

by Swathi   on 15 Jun 2016  3 Comments
Tags: Thudikkum Yennam   Yennangal   எண்ணம்   துடிக்கும் எண்ணம்           
 தொடர்புடையவை-Related Articles
துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!! - கவிப்புயல் இனியவன் துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!! - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
21-Jun-2016 07:01:05 பெரியார் சாமி.. said : Thank you
கலங்காதே! கடவுளே மறந்திடாதே! நான் என்னை வெல்வேன்! என் கலங்காத மனதினால்! நான் உன்னை வெல்வேன்! என் கடுமையான முயற்சியினால்!!!
 
16-Jun-2016 08:18:57 வின் ருசாந்தன் said : Thank you
எல்லா தளத்திலும் உங்கள் கவிதை மழையே வாழ்த்துகள்
 
16-Jun-2016 08:17:17 vettryvel said : Thank you
அருமையான வேதனை தொடருங்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.