LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

துணைவயிற் பிரிவு

தலைவன் பாங்கிக்கு அறிவுறுத்தல்.
447.
செருத்துணையாய் மன்னர்தெம்முனைச்சென்றியான் றிரும்பளவும்
கருத்துணை யான கலைச்சைத் தியாகர் கதமிலருள்
உருத்துணையாயன்பர்க்கின்பு செய்தாலென்ன வொண்ணுதலாய்
திருத்துணை யான தெரிவைக் கறிவித்துத் தேற்றுகவே. 1

தோழி மறுத்தல்.
448.
இரவல ரம்பிறைக் கும்மதன் ஞாட்புக் கிடைதருகொம்
பரவல நீங்கத் துணையா யிருக்கிற் பலனல்லவோ
அரவலங் காரர் கலைசைத் தியாகரை யாதரியாப்
புரவலர் போர்த்துணை யாப்புறம் போகப் புகன்றவரே. 2

தலைவிக்குப் பாங்கி அறிவுறுத்தல்.
449.
கட்டாரி யாதி படைதிரித் தேமன்னர் காளையமேற்
சுட்டா நடந்தனர் தோகையன் னாய்நமர் சூழ்ந்துசிறார்
வட்டாடும் வீதிக் கலைசைத் தியாகரை வாழ்த்தலர்போல்
ஒட்டா ரிடுநொச்சி யாதுகொ லாயங் குறுகின்றதே. 3

தலைவி பின்பனிப் பருவம் கண்டு வருந்தல்.
450.
தெள்ளும் வெண் ணீற்றர் சிதம்பர நாயகர் தென்கலைசைப்
புள்ளுஞ் சிறகிற் பெடையொடுக் கிப்பிள்ளை போற்றித்துயில்
கொள்ளும் பனிதூங் கிரவிலித் துன்பங் கொளக்கருவில்
தள்ளும் வினைசுமந் தேனைப்பெற் றாளன்னை தான்சுமந்தே. 4

தலைவியை தோழி ஆற்றுவித்தல்.
451.
கும்பங் கொடுத்த கலைசைத் தியாகர் குளக்கணுஞ்சீ
தம்பம் பிடவசை யுங்குளிர் வாடை தணந்தவர்க்குக்
கம்பஞ்செய் பின்பனி நாளின்வந் தார்நண்பர் கவ்வையற
அம்பந் தணைவிர லாய்துணை யாய்முன் னகன்றவரே. 5

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.