LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும்

நாளையக் கனவுகள் இன்று கலைந்தன.
நேற்றைய உணர்வுகள் இன்று சிதைந்தன.
காக்கி உடையில்
துப்பாக்கி அரக்கர்
தாண்டவம் ஆடினர்.
ஒருபெரும் நகரம் மரணம் அடைந்தது.

வாழ்க்கையின் முடிவே மரணம் என்போம்
ஆயின் எமக்கோ
மரணமே எமது வாழ்வாய் உள்ளது.

திருவிழாக் காணச் சென்றுகொண்டிருக்கையில்
படம்பார்க்கச் செல்லும் பாதி வழியில்
பஸ்நிலையத்தின் வா¢சையில் நிற்கையில்
சந்தையில் இருந்து திரும்பி வருகையில்
எங்களில் யாரும்
சுடப்பட்டு இறக்கலாம்
எங்களில் யாரும்
அடிபட்டு விழலாம்.

உத்தரவாதம் அற்ற வாழ்க்கையே
மனிதனின் விதியா?
அடக்குமுறைக்கு அடிபணிவதே
அரசியல் அறமா?

அதை நாம் எதிர்ப்போம்!
அதை நாம் எதிர்ப்போம்!!
தனிநாடு அல்ல
எங்களின் தேவைளூ
மனிதனுக்கு¡¢ய வாழ்க்கை உ¡¢மைகள்.
மனிதனுக் கு¡¢ய கெளரவம்
வாழ்க்கைக் கான உத்தரவாதம்.

யார் இதை எமக்கு மறுத்தல் கூடும்?
மறுப்பவர் யாரும் எம்எதிர் வருக!
காக்கி உடையில்
துப்பாக்கி அரக்கர்
தாண்டவம் ஆடுக!

போராடுவதே மனிதனின் விதிஎனில்
போராட்டத்தில்
மரணம் அடைவதும் மகத்துவம் உடையதே.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.