LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

துரத்தும் நினைவுகள் ! - கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

அவன் 
மலர் சோலைகளோடு 
சண்டை போட்டு இருக்கிறான்! 

அவள் கூந்தலுக்கு 
மலரை 
அனுப்ப மறுக்கின்றன ! 

அவன் 
தென்றலுக்கு 
கால் பிடித்திருக்கிறான் ! 

காதல் மொழிகளை 
அவள் 
காலடியில் கொட்டுகின்றன ! 

நிழலுக்கு என்னவாயிற்று 
அவன் மீது கோபம் 
அவள் நினைவுகள் 
நிழல்போல் 
விடாமல் துரத்துகின்றன 
அவளிடம் அவனை 
சேர்ப்பதற்குத்தானோ ! 

எழுதுகோலே 
அவர்கள் காதலை 
கடிதத்தில் எழுதி 
பறக்க விட்டு விடாதே 
கல்யாணப் பத்திரிகையில் 
வரும்வரை . 

அவர்கள் காதல் 
இனிய கவிதையாக 
இருக்கட்டும் 
மீண்டும் 
தேவதாஸ் பார்வதி 
கதையாகிவிட வேண்டாம் ! 

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் 
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

by Subramanian   on 30 Sep 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
11-Jan-2020 05:21:08 Naveenprathap said : Report Abuse
அருமையான படைப்பு ......
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.