பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணம் செய்தவர்களிடம் இருந்து, இந்த மாதம் மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் வரையி்ல் வருவாய் வசூலானதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ரயில்வே நி்ர்வாகம் சார்பில் முக்கிய நகரங்களான லக்னோ, பாட்னா, போபால், நாக்பூர், விஜயவாடா, சென்னை, ஹவுரா, புதுடில்லி மற்றும் புனே நகரங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதனால் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து மொத்தம் 4 கோடியே 89 லட்சத்து 4,927 ரூபாய் வசூலி்க்கப்பட்டுள்ளது. இவைகளி்ல் பெரும்லானவை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்தும், ரயிலில் புகை பிடித்து கொண்டிருந்தவர்களிடம் இருந்து பெறப்பட்டது. மேலும் இது போன்ற அதிரடி சோதனைகள் வரும் மாதங்களில் தொடரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|