|
|||||
புருவங்களை அழகாக்க சில டிப்ஸ் !!! |
|||||
முகத்தின் அழகுக்கு மெருகேற்றுவது புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும்.
புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது. மேலும் அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் என்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம். இதனால் புருவங்களிடையே, இரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும்.
புருவங்களில் எண்ணெய் தடவுவதற்கு முன்பாக, இரண்டு விரல்களால் புருவங்களை மெதுவாகக் கிள்ளி விட வேண்டும். எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அது அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரவும் வழி செய்கிறது.
தினமும், குளிப்பதற்கு முன்பு, புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம். இதுவும் புருவங்கள் அழகாக உதவும்.
புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே சிறந்தது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் முறையில் புருவத்தை அகற்றினால் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் கூடும். முக்கியமாக பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பிளேடு உபயோகித்து புருவங்களை அகற்றும் போது, அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது ரொம்பவும் திக்காக கன்னாபின்னாவென வளரும்.
புருவங்கள் நரைத்திருந்தால், ஐ ப்ரோ பென்சில் பயன்படுத்துவதை தவிர்த்து, மஸ்காராவை உபயோகிப்பது நல்லது. புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி, யிலாங் யிலாங் மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிகச் சிறந்தவை. |
|||||
by Swathi on 28 Oct 2013 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|