|
|||||
உங்களுக்கு நிம்மதியான உறக்கம் வேண்டுமா? முதலில் இந்த படிங்க !! |
|||||
மனிதனால் உணவு இல்லாமல் கூட சில நாள் உயிர்வாழலாம், ஆனால் தூக்கம் இல்லாமல் வாழ்வது மிகமிக கடினம். மனிதனின் அன்றாட செயல்பாடுகளை திறம்பட செய்து முடிக்க, முழுமையான எட்டு மணிநேர இரவு உறக்கம் இன்றியமையாத ஒன்று. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 8 மணி நேரம் தூங்குபவரின் அறிவு ஆற்றல், நினைவு ஆற்றல் அதிகரிப்பதாகவும், 8 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களின் அறிவு ஆற்றலும், நினைவு ஆற்றலும் குறைவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய பரபரப்பான உலகில், தூங்குவதற்கு நேரம் கிடைத்தாலும் இரவில் தூக்கம் வராமல் அவஸ்தை பட்டுக்கொண்டு இருப்போம். இது போன்ற நேரங்களில், நிம்மதியான உறக்கத்திற்கு உதவும் சில உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. அந்த உணவுகள் பற்றி இங்கு விரிவாக காண்போம். பால் உணவுகள் : பால், பாலாடைக்கட்டி போன்றவற்றில் ட்ரிப் டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த பொருட்களில் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்கச்செல்வதற்கு முன்னர் பால் உணவுகள் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது. பாதாம் : பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. வாழைப்பழம் : வாழைப்பழங்களில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உங்களில் உடலின் தசைகளை சீராக இயக்க உதவுகின்றது. அத்தோடு இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது. இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு மிகவும் அவசியமானவை. செர்ரி : மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு டம்ளர் செர்ரி ஜூஸ் அருந்திவிட்டு தூங்க சென்றாலே போதும் தூக்கம் தன்னால் வரும். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெல டொனின் செர்ரிப் பழங்களில் அதிகம் காணப்படுகிறது. முந்திரி, கசகசா : கசகசாவை முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம். தூக்கத்தை கெடுக்கும் உணவுகள் : பழங்கள் : இரவில் பழங்கள் சாப்பிடுவதனால் வாயுத்தொல்லை ஏற்படும் என்கின்றனர். பழங்களில் உள்ள அமிலங்கள் தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும். ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, பெர்ரீ ஆகிய பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவதை விட பகல் நேரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். மைதா : இரவு நேரத்தில் மைதா உணவுகளை சாப்பிடுவதால் அது எளிதில் ஜீரணமாகாத காரணத்தினால்தான் தொப்பை போடும், உடல் குண்டாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கான்ப்ளக்ஸ் போன்ற காலையில் டிபன் உணவுக்கு சாப்பிடுபவைகளை இரவில் சாப்பிடக்கூடாது. மாமிச உணவுகள் : இரவுநேரங்களில் அதிக கொழுப்புள்ள மாமிச உணவுகளை உட்கொள்ளக்கூடாது. ரெட்மீட் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும். காலையில் சாப்பிடுதற்கு ஏற்ற அந்த உணவுகளை இரவில் சாப்பிடுவது உகந்ததல்ல. எனவே இரவில் மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். ஆழ்ந்த உறக்கம் பெற சில ஆலோசனைகள் : தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிடுங்கள். எளிதில் ஜீரணம் ஆகா கூடிய உணவுகளையே இரவில் சாப்பிடுங்கள். இரவு படுக்கைக்கு செல்லும் முன் வெந்நீரில் குளித்தால் நன்றாக தூக்கம் வரும். படுக்கை சொல்லும் முன்பு காபி,தேநீர் போன்றவற்றை அறவே தவிருங்கள். இதில் உள்ள காபின் என்ற வேதி பொருள் மூளையின் அட்ரினலின் சுரப்பதை அதிக படுத்தி தூக்கத்தை கெடுக்கிறது. மது அருந்துவதை தவிருங்கள், இது போதையை தருமே தவிர, ஆழ்ந்த உறக்கத்தை தராது. தூங்கசெல்லும் போது சிறிது நேரம் லேசான உடல் பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது. முக்கியமாக உங்கள் படுக்கையை உங்களுக்கு பிடித்த மன நிலைக்கு ஏற்றது போல இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள் அதாவது அமைதியாகவும், நல்ல காற்றோட்டமும், வெளிச்சம் குறைவாகவும் மற்றும் சௌகரியமாகவும் இருக்குமாறு அமையுங்கள். படுக்கையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். |
|||||
by Swathi on 06 Nov 2013 1 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|