|
||||||||
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு அதிகாரி பணி |
||||||||
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெற உள்ள ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்ட பணியில் சிறப்பு அதிகாரியாக பணியாற்ற இந்து மதத்தை சேர்ந்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : சிறப்பு அதிகாரி (ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டம்)
காலிப்பணியிடம் : 1
வயது வரம்பு : 45-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி : தமிழ் துறையில் நல்ல மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வைஷ்ணவம் குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். திவ்ய பிரபந்தங்களில் உள்ள ஆச்சார்யர்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்து பயிற்சிகள் செய்யும் வழி முறைகள் குறித்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஆன்மிகம் குறித்த கட்டுரைகள் எழுதி இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.18,030 - 43,630
விண்ணப்பிக்கும் முறை : www.tirumala.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ் நகல்களில் கெஜடெட் அதிகாரிகளிடம் அட்டெஸ் பெற்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப உறையின் மீது Application for the post of Special Officer, Alwar Divya Prabhandha Project TTD என்று எழுதி அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The Executive Officer,
T.T.D. Administrative Building,
K.T. Road, Tirupati - 517501,
Andhra Pradesh.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.12.2013
மேலும் விரிவான விவரங்களுக்கு www.tirumala.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும். |
||||||||
by Swathi on 23 Dec 2013 0 Comments | ||||||||
Tags: திருப்பதி தேவஸ்தானம் தேவஸ்தான வேலைவாய்ப்புகள் சிறப்பு அதிகாரி Special Officer Recruitment Tirumala Tirupati Devasthanam Tirupati Devasthanam | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|