LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை

 

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் 
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன் 
செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல் 
எம்பெருமான் தேவர்பிரான் என்று. 358 
ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும் 
நாதன்மை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு 
அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும் 
தென்பாண்டி நாடே தெளி. 359 
தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் 
மாதாடும் பாகத்தான் வாழ்பதியென் - கோதட்டிப் 
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும் 
உத்தர கோசமங்கை யூர். 360 
செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர் 
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய் 
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் 
ஆனந்தங் காணுடையான் ஆறு. 361 
கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன் 
மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்து 
இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி 
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து. 362 
இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே 
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும் 
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப 
வான்புரவி யூரும் மகிழ்ந்து. 363 
கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோள் 
மாற்றாறை வெல்லும் படைபகராய் - ஏற்றார் 
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங் 
கழுக்கடைகாண் கைக்கொள் படை. 364 
இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோள் 
முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற் 
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் 
பருமிக்க நாதப் பறை. 365 
ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூரும் அன்பர்பால் 
மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை 
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான் 
தாளிஅறு காம் உவந்த தார். 366 
சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன் 
கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும் 
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும் 
கோதிலா ஏறாம் கொடி. 367 

 

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் 

சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன் 

செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல் 

எம்பெருமான் தேவர்பிரான் என்று. 358 

 

ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும் 

நாதன்மை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு 

அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும் 

தென்பாண்டி நாடே தெளி. 359 

 

தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் 

மாதாடும் பாகத்தான் வாழ்பதியென் - கோதட்டிப் 

பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும் 

உத்தர கோசமங்கை யூர். 360 

 

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர் 

ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய் 

வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் 

ஆனந்தங் காணுடையான் ஆறு. 361 

 

கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன் 

மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்து 

இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி 

அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து. 362 

 

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே 

ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும் 

தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப 

வான்புரவி யூரும் மகிழ்ந்து. 363 

 

கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோள் 

மாற்றாறை வெல்லும் படைபகராய் - ஏற்றார் 

அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங் 

கழுக்கடைகாண் கைக்கொள் படை. 364 

 

இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோள் 

முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற் 

பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் 

பருமிக்க நாதப் பறை. 365 

 

ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூரும் அன்பர்பால் 

மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை 

நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான் 

தாளிஅறு காம் உவந்த தார். 366 

 

சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன் 

கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும் 

ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும் 

கோதிலா ஏறாம் கொடி. 367 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.