திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே புலவன் பாடி என்ற கிராமத்தில் இன்று காலை சுமார் 8.30 மணி அளவில் 250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த தேவி என்கிற குழந்தை 10 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டது. மயக்க நிலையில் மீட்கப்பட்ட குழந்தை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சு விடாமல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் இறப்பு திருவண்ணாமலை மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
|