தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கனவு திட்டமான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சுமார் ரூ.1,929 கோடி செலவில் நிறைவேற்றப்படும் இந்த திட்டத்தின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,755 குடியிருப்புகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும்.
|