சமீபத்தில் தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், இந்த விவகாரம் பற்றி விவாதிக்க தமிழக முதலமைச்சர் தலைமையிலான கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ-மாணவியரும் தங்களது உள் தேர்வுகளை அவரவர் விருப்பப்படி தமிழிலோ, அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|