தமிழகத்தின் இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாக்கவும், பசுமைப் போர்வையை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.கடந்த 2001-2006 ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தேக்கு மரத் தோட்டங்கள் ஏற்படுத்தும் திட்டத்தை செம்மைப்படுத்தும் வகையில், ரூ.39.50 கோடி செலவில் 19,075 ஹெக்டேர் பரப்பில் தேக்கு மரங்கள் நடவு செய்யப்படும் என்றும், ஏற்கெனவே பயிரிடப்பட்டுள்ள தேக்கு மரங்களை பராமரிப்பதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் இதன் முதல் கட்டமாக, ரூ.6.08 கோடி செலவில் திருச்சி, கடலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் 6 ஆயிரத்து 475 ஹெக்டேர் பரப்பில் தேக்கு மரங்கள் வளர்க்கும் திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் தமிழகம் பசுமை பெற்று விளங்குவதோடு அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
|
TN Government has taken Necessary Action for Develop the natural resources,Maintain and protect the Environment and Enhancing the Green wrapper.The period 2001-2006 in order to optimize to the Sagwan trees plantations project, at a cost of Rs .39.50 crore in the 19.075 hectare of Sagwan planting of trees.The Sagwan trees planted maintaind already assigned to additional funding.The first step,TN Government Rs.6.08 crore money for Trichy, Cuddalore, Karur, Thanjavur, Nagapattinam, Tiruvarurand Tirunelveli districts 6 thousand 475 hectares Trees growing on the surface of the Sagwan on the implementation. |