LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் கருவூலகங்கள் கணினி மயமாகிறது!

தமிழகத்தில் கருவூலகங்கள் கணினி மயமாவதாக முதன்மை செயல் அதிகாரி கூறினார்.

பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் அரசு கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட திறனூட்டல் மாநாடு,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கருவூலம் மற்றும் கணக்குத் துறை முதன்மைச் செயலர் தென்காசி ஜவகர் கலந்து கொண்டார். இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கருவூல அதிகாரிகள், ஊழியர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உட்பட கருவூலம் வழியாக சம்பளம் பெறும் துறையைச்  சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

கருவூலங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டம் குறித்து முதன்மைச் செயலர் ஜவகர் கூறியதாவது:
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கம்ப்யூட்டரை பயன்படுத்துவது விரிவுபடுத்தப்படுகிறது. 

இந்தத்திட்டம் செயல்படுத்தப் படுவதால் அரசு அலுவலகங்களில் 1000 டன் காகித பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்படும். இதன் மூலம் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிதாக கணினி மயமாக்கப்படும். 

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் இத்திட்டம் வரும் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப் படுகிறது. இதற்கு முன்பு ஒரு அரசு ஊழியர், ஓய்வூதிய தொகை அல்லது பிற பணப்பலன்களைப் பெற சுமார் 15 நாட்கள் ஆகும். ஆனால், கருவூலங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டவுடன் 15 நிமிடங்களில், அவர்களின் கணக்கை சரிபார்த்து பணம் கொடுக்கப்படும்.

இதைத் தொடர்ந்து கருவூலங்களில் காலையில் பில், மாலையில் பணம் என்ற நிலை வரவுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் பணிப் பதிவேடு கணினிகளில் செயல்படுத்தப் படுவதால்  அவர்களின் கணக்குகளை செல்போன் மற்றும் லேப்டாப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் ஒரு அரசு ஊழியர் இன்று ஓய்வுபெற்றால், அதற்கு மறுநாளில் இருந்தே அவருக்கான ஓய்வூதியம் வழங்கும் பணி தொடங்க ஆரம்பித்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 18 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.