|
|||||
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு ! இரண்டு மாணவர்கள் முதலிடம் ! |
|||||
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பிப்ரவரி 29ம் தேதி துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடந்தது. தமிழகம் முழுவதும், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்வுதாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, இன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் முதலிடம் பிடித்துள்ளனர். 1988 மதிப்பெண்களை பெற்று நாமக்கல் பழனிராஜ், ஓசூர் அகல்யா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 1187 மதிப்பெண்கள் பெற்று 9 பேர் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
தேர்ச்சி சதவீதம் :
மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் - 84.7
மாணவிகள் தேர்ச்சி சதவீதம் - 91
சதம் அடித்தவர்கள் :
கணிதம் 2352 பேர், உயிரியல் 682 பேர், தாவரவியல் 11 பேர், வேதியல் 1499 பேர், இயற்பியல் 36 பேர், வணிகவியல் 1336 பேர், கணினி அறிவியல் - 1469 பேர், வணிக கணிதம் - 430 பேர், கணக்கு பதிவியல் - 1815 பேர்
|
|||||
by Swathi on 09 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|