|
|||||
டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வு முடிவுகள் முதல் முறையாக 36 நாளில் வெளியானது! |
|||||
டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வு முடிவுகள் முதல் முறையாக 36 நாளில் வெளியானது. இதற்கான அறிவிப்பை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன் வெளியிட்டார். இதுகுறித்து, வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது: குரூப் 2 முதல்நிலைத் தேர்வு கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்தத் தேர்வினை 4 லட்சத்து 62 ஆயிரத்து 697 பேர் எழுதினர். தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்துக்கும் முடிவுகளை விரைந்து வெளியிட தேர்வாணையம் முடிவு செய்து உள்ளது.. அதன்படி, தற்போது குரூப் 2-க்கான முதனிலைத் தேர்வின் முடிவினை 36 நாட்களில் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 2 மாத கால அவகாசத்துக்கும் கூடுதலான கால அவகாசத்துடன் அதாவது 69 நாட்கள் இடைவெளியில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-இல் நடத்தப்படுகிறது. முதன்மைத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 194 விண்ணப்பதாரர்கள், தங்களது சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpscexams.net) அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக வரும் 24 முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான கட்டணத்தையும் ஜனவரி 10-ஆம் தேதிக்குள்ளாக தேர்வாணைய இணையதளம் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும். சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத, விண்ணப்பக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்துள்ளார். குரூப் 2 முதன்மைத் தேர்வு வரும் பிப்ரவரி 23-இல் நடைபெறவுள்ளது. இந்தத் தேதியில் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட வேண்டிய நூலகர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்வுக்கான தேதி வேறொரு நாளில் அறிவிக்கப்படும் எனவும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்து உள்ளார். |
|||||
by Mani Bharathi on 18 Dec 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|