LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வு முடிவுகள் முதல் முறையாக 36 நாளில் வெளியானது!

டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வு முடிவுகள் முதல் முறையாக 36 நாளில் வெளியானது. 

இதற்கான அறிவிப்பை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன் வெளியிட்டார்.  இதுகுறித்து,  வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

குரூப் 2 முதல்நிலைத் தேர்வு கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்தத் தேர்வினை 4 லட்சத்து 62 ஆயிரத்து 697 பேர் எழுதினர்.  தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் அனைத்துக்கும் முடிவுகளை விரைந்து வெளியிட தேர்வாணையம் முடிவு செய்து உள்ளது.. அதன்படி, தற்போது குரூப் 2-க்கான முதனிலைத் தேர்வின் முடிவினை 36 நாட்களில் வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 2 மாத கால அவகாசத்துக்கும் கூடுதலான கால அவகாசத்துடன் அதாவது 69 நாட்கள் இடைவெளியில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-இல் நடத்தப்படுகிறது. 

முதன்மைத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 194 விண்ணப்பதாரர்கள், தங்களது சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpscexams.net) அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக வரும் 24 முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான கட்டணத்தையும் ஜனவரி 10-ஆம் தேதிக்குள்ளாக தேர்வாணைய இணையதளம் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.

சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத, விண்ணப்பக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்துள்ளார்.

குரூப் 2 முதன்மைத் தேர்வு வரும் பிப்ரவரி 23-இல் நடைபெறவுள்ளது. இந்தத் தேதியில் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட வேண்டிய நூலகர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்வுக்கான தேதி வேறொரு நாளில் அறிவிக்கப்படும் எனவும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்து உள்ளார்.

by Mani Bharathi   on 18 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.