தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மறு தேர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. குரூப் 2 தேர்வு எழுத சுமார் 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 13ம் தேதி வெளியானது. இதில், சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையர், வரு வாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் இடம் பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு விண்ணபித்தவர்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். சென்னை, ஊட்டி மையங்கள் வெறிச்சோடின. தேர்வு நடக்கும் மையங்கள் அனைத்தும் விடியோ கேமராக்கள் மற்றும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன. தேர்வுப் பணி மற்றும் பறக்கும் படைப் பணியில் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
குரூப் 2 தேர்வு பற்றி தேர்வாணையத்தின் தலைவர் ஆர்.நடராஜ் கூறியது: குரூப் 2 தேர்வு முடிவுகள் 45 நாட்களில் வெளியிடப்படும். அதற்கு முன்னதாக நாளை மறுநாள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப் 2 வினாவுக்கான விடைகள் கொடுக்கப்படும். அதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடியாக தெரிவிக்கலாம்.மேலும் ஒரு வாரத்தில் இறுதி செய்யப்பட்ட விடைகள் அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தலைவர் ஆர்.நடராஜ் கூறினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மறு தேர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. குரூப் 2 தேர்வு எழுத சுமார் 6.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 13ம் தேதி வெளியானது. இதில், சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், உதவி பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இளநிலை கண்காணிப்பாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையர், வரு வாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் இடம் பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு விண்ணபித்தவர்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். சென்னை, ஊட்டி மையங்கள் வெறிச்சோடின. தேர்வு நடக்கும் மையங்கள் அனைத்தும் விடியோ கேமராக்கள் மற்றும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டன. தேர்வுப் பணி மற்றும் பறக்கும் படைப் பணியில் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
குரூப் 2 தேர்வு பற்றி தேர்வாணையத்தின் தலைவர் ஆர்.நடராஜ் கூறியது: குரூப் 2 தேர்வு முடிவுகள் 45 நாட்களில் வெளியிடப்படும். அதற்கு முன்னதாக நாளை மறுநாள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப் 2 வினாவுக்கான விடைகள் கொடுக்கப்படும். அதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடியாக தெரிவிக்கலாம்.மேலும் ஒரு வாரத்தில் இறுதி செய்யப்பட்ட விடைகள் அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தலைவர் ஆர்.நடராஜ் கூறினார்.
|