|
|||||
அதிக குழந்தை பெற்றால் ஊக்கதொகை வழங்கும் பார்சி இன மக்களின் பஞ்சாயத்து !! |
|||||
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிக குழந்தை பெரும் பார்சி இன தம்பதியர்களுக்கு, மாதாமாதம் ஊக்க தொகை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, பார்சி இன மக்களின் பஞ்சாயதத்து.
பார்சி இன மக்கள், எட்டு முதல், பத்தாம் நுாற்றாண்டில், ஈரானில் இருந்து இந்தியாவில் குடியேறினர். அவர்களில் பெரும்பாலானோர், குஜராத் மற்றும் மகாராஷ்டிர போன்ற மாநிலங்களில் வசிக்கின்றனர். கடந்த, 1951ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 1.11 லட்சமாக ஆக இருந்த, பார்சி மக்கள்தொகை, 2011ல், 85 ஆயிரமாக குறைந்துவிட்டது. இந்த இனத்தவரின் மக்கள்தொகை, ஆண்டுக்கு, 10 - 15 சதவீதம் குறைந்து வருகிறது; இந்நிலை நீடித்தால், 2050ல், பார்சி இன மக்கள்தொகை, 36 ஆயிரமாக குறைந்துவிடும்.எனவே, குறைந்து வரும் மக்கள்தொகையை அதிகரிக்க, 'இரண்டாவது குழந்தை பெறுவதற்கு தம்பதிகளை ஊக்கப்படுத்தும் வகையில், இரண்டாவது குழந்தையின் 18வது வயது வரை, மாதந்தோறும், 3,000 ரூபாயும், மூன்றாவது குழந்தை பெற்றால், அந்தக் குழந்தையின் 18வது வயது வரை மாதந்தோறும், 5,000 ரூபாயும் வழங்கப்படும் என, மும்பை பார்சி இன மக்களின் பஞ்சாயத்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிக குழந்தை பெரும் பார்சி இன தம்பதியர்களுக்கு, மாதாமாதம் ஊக்க தொகை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, பார்சி இன மக்களின் பஞ்சாயதத்து.
பார்சி இன மக்கள், எட்டு முதல், பத்தாம் நுாற்றாண்டில், ஈரானில் இருந்து இந்தியாவில் குடியேறினர். அவர்களில் பெரும்பாலானோர், குஜராத் மற்றும் மகாராஷ்டிர போன்ற மாநிலங்களில் வசிக்கின்றனர். கடந்த, 1951ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, 1.11 லட்சமாக ஆக இருந்த, பார்சி மக்கள்தொகை, 2011ல், 85 ஆயிரமாக குறைந்துவிட்டது. இந்த இனத்தவரின் மக்கள்தொகை, ஆண்டுக்கு, 10 - 15 சதவீதம் குறைந்து வருகிறது; இந்நிலை நீடித்தால், 2050ல், பார்சி இன மக்கள்தொகை, 36 ஆயிரமாக குறைந்துவிடும்.எனவே, குறைந்து வரும் மக்கள்தொகையை அதிகரிக்க, 'இரண்டாவது குழந்தை பெறுவதற்கு தம்பதிகளை ஊக்கப்படுத்தும் வகையில், இரண்டாவது குழந்தையின் 18வது வயது வரை, மாதந்தோறும், 3,000 ரூபாயும், மூன்றாவது குழந்தை பெற்றால், அந்தக் குழந்தையின் 18வது வயது வரை மாதந்தோறும், 5,000 ரூபாயும் வழங்கப்படும் என, மும்பை பார்சி இன மக்களின் பஞ்சாயத்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
|
|||||
by Swathi on 21 Nov 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|