ஒடிசா அரசு கைத்தறி ஆடைகளை பிரபலபடுத்தும் வகையில் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை தோறும் கைத்தறி ஆடைகளை அணிந்து வரவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.ஒடிசாவில் சரிவு நிலையில் உள்ள கைத்தறி துறையை மேம்படுத்த முதல்வர் பட்நாயக் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக நவம்பர் 16 ம் தேதி முதல் பத்து மாவட்டங்களில் பணிபுரியும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக வெள்ளிகிழமைகளில் கைத்தறிதுனிகளை அணிந்து வரவேண்டும் என அரசின் வருவாய்த் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அரசின் இந்த உத்தரவை ஒடிசா நெசவாளர்கள் வரவேற்றுள்ளனர்.மேலும் அவர்கள் கூறுகையில் "கைத்தறி துணிகளை, தற்போது சந்தைப்படுத்துவது, நெசவாளர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது; அரசின் இந்த முடிவு, நெசவாளர்களுக்கு ஒரு புது உத்வேகம் அளிக்கிறது என தெரிவித்துள்ளனர்.
ஒடிசா அரசு கைத்தறி ஆடைகளை பிரபலபடுத்தும் வகையில் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை தோறும் கைத்தறி ஆடைகளை அணிந்து வரவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.ஒடிசாவில் சரிவு நிலையில் உள்ள கைத்தறி துறையை மேம்படுத்த முதல்வர் பட்நாயக் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக நவம்பர் 16 ம் தேதி முதல் பத்து மாவட்டங்களில் பணிபுரியும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக வெள்ளிகிழமைகளில் கைத்தறிதுனிகளை அணிந்து வரவேண்டும் என அரசின் வருவாய்த் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அரசின் இந்த உத்தரவை ஒடிசா நெசவாளர்கள் வரவேற்றுள்ளனர்.மேலும் அவர்கள் கூறுகையில் "கைத்தறி துணிகளை, தற்போது சந்தைப்படுத்துவது, நெசவாளர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது; அரசின் இந்த முடிவு, நெசவாளர்களுக்கு ஒரு புது உத்வேகம் அளிக்கிறது என தெரிவித்துள்ளனர்.
|