LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சட்ட விரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினரை கணக்கெடுக்க உத்தரவு

சட்ட விரோதமாக குடியேறியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பற்றிய விவரங்களை சேகரிக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மியான்மர் நாட்டை சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் 14,000 பேர், ஐ.நா அகதிகள் தூதரக அலுவலகத்தில் பதிவு செய்து இந்தியாவில் வசித்து வருகின்றனர். இது தவிர 40 ஆயிரம் பேர் சட்ட விரோதமாக குடியேறியுள்ளனர்.

கடந்த ஜூலையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், `இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்க வேண்டும்’ என பாதுகாப்பு படையினரை கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள ரோஹிங்கியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் கைரேகை, கருவிழி படலம் ஆகிய பயோமெட்ரிக் விவரங்களை சேகரிக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

 ரோஹிங்கியர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஆதார் பெற்றிருக்க முடியாது. எனவே, அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட  அடையாள அட்டைகளை போலீசாரிடம் காண்பிக்க வேண்டும் என்று கூறி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

by Mani Bharathi   on 30 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.