|
|||||
பொறியியல் கல்லூரி விண்ணப்பங்களை சமர்பிக்க இன்று கடைசி நாள் ! |
|||||
பொறியியல் கல்லூரி விண்ணப்பங்களை வாங்கவும், சமர்ப்பிக்கவும் இன்றே கடைசி நாளாகும். தமிழக முழுவதும் உள்ள 59 மையங்களில் நேற்று மாலை வரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 230
விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. பொறியியல்
கல்லூரி விணப்பங்கள் சமர்பித்தல் குறித்து வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது, பொறியியல் விண்ணப்பங்களை அனைத்து மாணவர்களும் இன்றைக்குள் சமர்ப்பித்துவிட வேண்டும். உரிய
சான்றிதழ்கள் கிடைக்காத மாணவர்கள்கூட விண்ணப்பங்களை முதலில் சமர்ப்பித்துவிட வேண்டும். கலந்தாய்வுக்கு முன்னதாக அந்தச் சான்றிதழ் கிடைத்தவுடன் அதில் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவுக்கு அனுப்பலாம். முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு அந்தச் சான்றிதழ் கிடைக்கப்பெறாத பட்சத்தில் அவர்கள் விண்ணப்பத்தில் முதல்
தலைமுறை பட்டதாரி மாணவர் என்று குறிப்பிட்டிருந்தாலே போதும்.அந்தச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றவுடன், விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு அவர்கள் சேர்க்கைக் குழுவுக்கு அனுப்பலாம். அந்த
மாணவர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவராகக் கருதப்படுவார். விண்ணப்பங்கள் பொறியியல் சேர்க்கைக் குழுவுக்குக் கிடைத்திருக்கிறதா, இல்லையா என்ற தகவலை மாணவர்கள் இணையதளத்தின்
வாயிலாக அறிந்து கொள்ளலாம். தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதளப் பக்கத்தில் மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை டைப் செய்து இந்தத் தகவலை
அறிந்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றவுடன் ஓ.எம்.ஆர். தாளில் தெரிவிக்கப்பட்டுள்ள முதல்கட்ட தகவல்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். அதில் ஏதேனும்
விவரங்கள் தவறாக இருந்தால் மாணவர்கள் தெரிவிக்கலாம். அந்த விவரங்கள் சரிசெய்து கொள்ளப்படும். ஜூன் 5-ஆம் தேதி ரேண்டம் எண்ணும், ஜூன் 12-ஆம் தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்படும்.
அப்போது தங்களது விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தங்களுக்கான ரேண்டம் எண்ணையும், தரவரிசை எண்ணையும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். பொறியியல் சேர்க்கைக்கான ஒரே
அதிகாரப்பூர்வமான இணையதளப் பக்கம் www.annauniv.edu/tnea2013/ மட்டுமே.
பொறியியல் கல்லூரி விண்ணப்பங்களை வாங்கவும், சமர்ப்பிக்கவும் இன்றே கடைசி நாளாகும். தமிழக முழுவதும் உள்ள 59 மையங்களில் நேற்று மாலை வரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 230 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரி விணப்பங்கள் சமர்பித்தல் குறித்து வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது, பொறியியல் விண்ணப்பங்களை அனைத்து மாணவர்களும் இன்றைக்குள் சமர்ப்பித்துவிட வேண்டும். உரிய
|
|||||
by Swathi on 20 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|