திருவண்ணாமலையில் வருடம் தோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் உற்சவம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க இந்தியா மட்டும் அல்லாது வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். தீபத் திருவிழாவுக்காக இரண்டாயிரம் ஆயிரம் சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்கி உள்ளது.மேலும் பாதுக்கப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு முதல் முறையாக ஆளிலாவிமானம் மூலம் தீபத்திருவிழா கண்காணிக்கப்படுகிறது.
|