|
||||||||
தக்காளி ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் அவசியமானது !! |
||||||||
தக்காளி காய்கறி வகையைச் சேர்ந்தது என்பது பலரின் எண்ணம். ஆனால் உண்மையில் தக்காளி பழவகையைச் சேர்ந்தது. ஆரோக்கியத்திற்கு : தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, அதிக அளவில் உள்ளது. இதுதவிர கால்சியம், பாஸ்பரஸ்; மற்றும் இரும்புச்சத்து வைட்டமின் பி, மாவுச்சத்து ஆகியவையும் உள்ளது. இதில் மாவுச்சத்து குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கோடை வெயிலில் வெளியே சென்று வந்த பிறகு ஒரு தக்காளி துண்டை வைத்து சருமத்திற்கு மசாஜ் செய்தால் கருமை நீங்கி முகம் பொலிவு பெரும். கோடை காலத்தில் உணவில் அதிகளவு தக்காளியை சேர்த்துக் கொள்ளலாம், ஏனெனில் உடல் வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளும். ஆண்கள் தினமும் தக்காளியை உட்கொண்டு வந்தால், 20 சதவிகிதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தை குறைக்கலாம். தினமும் தக்காளி சாற்றினை கொண்டு மசாஜ் செய்து வந்தால், பருக்கள் வருவது குறைவதுடன் தழும்புகளும் மறையும். வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ஒன்றாக சேர்ந்து இருக்கும் தக்காளியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும். தக்காளி சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும். ரத்தசோகை, கல்லீரல் கோளாறு ஆகியவற்றுக்கும் மருந்தாகும். தக்காளி பழச்சாற்றை தினசரி குடித்து வந்தால் போதும் சுறுசுறுப்பாக இருக்கும். தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வைக்கு வழிவகுக்கும். கைகளில் ஏதேனும் வெட்டு காயம் ஏற்படும் பட்சத்தில், பச்சை தக்காளியை வெட்டு ஏற்பட்ட இடத்தில் வைத்தால் ஆன்டி-செப்டிக்காக செயல்படும். தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும் அருந்த வேண்டம். தக்காளியைப் பழமாகச் சாப்பிட்டாலும் இரசமாகச் சாப்பிட்டாலும் உடனே உடலில் கலந்துவிடும். இதனால் சக்தியும் கிடைக்கும்; உண்ட மற்ற உணவுகளும் உடனே செரிமானம் ஆகிவிடும். இந்தக் காரணத்தால்தான் பெரிய ஓட்டல்களில் முதலில் தக்காளி சூப் தருகிறார்கள் அழகுக்கு : ஒரு சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும். தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும். தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும். உருளைக்கிழங்கு துருவல் சாறு 1 தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து தக தகவென்று மின்னும். சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டதா? தக்களி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். தக்காளிச் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும். இதுதான் இயற்கை ஸ்கரப்பாக உபயோகிக்கலாம். |
||||||||
by Swathi on 20 Mar 2016 1 Comments | ||||||||
Tags: Tomato Thakkali தக்காளி | ||||||||
Disclaimer: |
||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|