வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, கடைசி வாய்ப்பாக, நாளை சிறப்பு முகாம் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்காக, அனைத்து வாக்குச்சாவடிகளில், நாளை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடி மையத்தில், வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படுவதுடன், அங்கு பணியிலிருக்கும் அலுவலர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு படித்துக்காட்டுவர்.
வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலும், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. பெயர் விடுபட்டவர்கள் படிவம், '6' ஐ பூர்த்தி செய்து, வயது மற்றும் இருப்பிட சான்றுகளை அளிக்கலாம். இந்த முகாமில், பட்டியலில் பெயர் மட்டும் சேர்க்கப்படும். நீக்கம், திருத்தம் செய்யப்பட மாட்டாது.
|