விரைவில் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என புதிதாக பொறுபேற்றுள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல என்றும். ஆனால், இரயில் பயணிகளுக்குப் பாதுகாப்பான பயணம் மற்றும் சிறந்த சேவையை வழங்குவதே எங்களின் இலக்கு. மேலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால், ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலை தற்போது எற்பட்டுள்ளதாகவும். கட்டணத்தை உயர்த்தா விட்டால், ரயில்வே துறைக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என அவர் தெரிவித்தார். தற்போது மத்திய அமைச்சரவை மாற்றப்பட்ட பின், ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே, "தேவைப்படும் பட்சத்தில், ரயில் கட்டணம் உயர்த்தப்படும்' என, பவன்குமார் பன்சால் கூறியது குறிப்பிடத்தக்கது.
|