|
|||||
தீபாவளி பண்டிகைக்கான பயண டிக்கெட் முன்பதிவு தேதி- ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு! |
|||||
தீபாவளி பண்டிகைக்கான பயண டிக்கெட் முன் பதிவு தேதியை ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. சொந்த ஊரிலிருந்து தொழில், படிப்பு,வேலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக நகர்ப்புறங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். எப்போதுமே அவர்கள் பண்டிகை மற்றும் முக்கிய விசேஷங்களுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். ரயில் டிக்கெட்டை 120 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ளும் வசதி பெரும் உதவியாக இருந்து வருகிறது. மலேசியா, சிங்கப்பூரில் வாழும் இந்தியர்களும் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். புதிதாகத் திருமணமான புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளி. தலைத் தீபாவளி எனப்படுகிறது. மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் அக்டோபர் மாதம் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் சனிக்கிழமை 29-ம் தேதி தொடங்கும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 27-ம் தேதி ரயிலில் பயணம் செய்ய இருப்பவர்கள் ஜூன் 29-ம் தேதி, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். |
|||||
by Mani Bharathi on 28 Jun 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|