நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்ச்சி பெற்று வந்த இலங்கை ராணுவ வீரர்கள் இரண்டு பேர் பலத்த பாதுக்கப்புடன் தமிழகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனை அடுத்து இன்று நடைபெற இருந்த அரசியல் கட்சிகளின் முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இம்மையத்தில் கடந்த மாதம் 27ம் தேதி முதல், இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ்.பந்தாரா தாசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திராஹெட்டி ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது, இலங்கையில் தமிழ் ஈழ மக்கள் படுகொலைக்கு காரணமான இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால், வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இன்று வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இலங்கை அதிகாரிகள் நேற்று வெளியேற்றப்பட்டதால் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி சார்பில் இன்று நடக்கவிருந்த முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக குன்னூர் வி.பி. தெருவில் இன்று காலை 10 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகிக்கிறார். பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்கின்றன.
|