LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வெலிங்டன் ராணுவ முகாமில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் வெளியேற்றம் !

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்ச்சி பெற்று வந்த இலங்கை ராணுவ வீரர்கள் இரண்டு பேர் பலத்த பாதுக்கப்புடன் தமிழகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனை அடுத்து இன்று  நடைபெற இருந்த அரசியல் கட்சிகளின் முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  


நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இம்மையத்தில் கடந்த மாதம் 27ம் தேதி முதல், இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ்.பந்தாரா தாசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திராஹெட்டி ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவந்தது, இலங்கையில் தமிழ் ஈழ மக்கள் படுகொலைக்கு காரணமான இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால், வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இன்று வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக 
அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இலங்கை அதிகாரிகள் நேற்று வெளியேற்றப்பட்டதால் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி சார்பில் இன்று நடக்கவிருந்த முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக குன்னூர் வி.பி. தெருவில் இன்று காலை 10 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகிக்கிறார். பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்கின்றன.

by Swathi   on 24 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.