LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மென்பொருளில் மாற்றம்: பத்தே நிமிடத்தில் பொதுமக்களின் பத்திரம் பதிவு செய்ய பதிவுத்துறை ஐஜி உத்தரவு!

மென்பொருளில் கொண்டு வந்த மாற்றம் காரணமாக பத்தே நிமிடத்தில் பொதுமக்களின் பத்திரத்தைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் அமலுக்கு வந்தது.

இதன் மூலம் பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதும் என்ற நிலையில், குறிப்பிட்ட தேதியில் பத்திரப்பதிவுக்கு வர வேண்டும்.  அவ்வாறு பதிவுக்கு வரும் பொதுமக்களின் பத்திரங்களை பதிவு செய்யாமல் சார்பதிவாளர்கள் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. 

மேலும், தங்கள் இஷ்டத்திற்கு வேண்டப்பட்டவர்களுக்கு சார்பதிவாளர்கள் பத்திரம் பதிவு செய்வதாகவும் ஐஜி குமரகுருபரனுக்கு புகார் வந்தது. அதன்பேரில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டார். 

தொடர்ந்து ஸ்டார் 2.0 என்ற மென்பொருளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்படி பத்திரம் பதிவு செய்ய வருபவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த வரிசை எண் படி பத்திரம் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகுதான் அடுத்து வரும் நபர்களுக்கு பத்திரம் பதிவு செய்ய முடியும் என்ற அடிப்படையில் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டது. 

இந்த திட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து சார்பதிவு அலுவலகங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பத்திரம் பதிவு செய்ய பொதுமக்கள் விண்ணப்பித்த 2 நாட்களில் அழைக்க வேண்டும். அப்போது, பதிவுக்கு வந்த பொதுமக்களை 10 நிமிடங்களுக்கு மேல் காக்க வைக்க கூடாது. அவர்கள் ஆவணப் பதிவு செய்தவுடன் ரசீது கொடுக்க வேண்டும். அதில், அசல் ஆவணத்தை எப்போது தர வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும், பத்திரம் பதியாவிட்டால் என்ன காரணம் என்பதை ரசீதில் குறிப்பிட வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், பதிவுக்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இது பொதுமக்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

by Mani Bharathi   on 06 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.