LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

திருச்சி விமானநிலைய டவரில் மோதிய விமானம் மும்பையில் பத்திரமாக தரை இறக்கம்!

திருசுசி விமான நிலைய டவரிலெ மோதிய விமானம் மும்பையில் பத்திரமாக தரை இறங்கியது.

திருச்சி  சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர்-இந்தியா விமானம் 136 பயணிகளுடன் புறப்பட்டது.  ரன்வேயிலேயே கிழக்குத் திசை  நோக்கிச் சென்று, மீண்டும் மேற்குத் திசையில் திரும்பி ரன்வேயில் பாதி தூரம் வந்து மேலே எழும்ப வேண்டும். ஆனால் இந்த விமானம் ரன்வே முடியும்  இடத்தில்தான் மேலே எழும்பியது. ரன்வே முடியும் இடத்தில் மேலே எழும்பியதால் விமானத்தின் பின் சக்கரம்  மேற்கு பகுதியில் நிறுவப்பட்டிருந்த டவரில் உரசியது.

இதில் அங்கிருந்த ஒரு டவர் உடைந்து நொறுங்கியது. பின்னர், விமானத்தின் இரு சக்கரங்களும் டவருக்கு அடுத்து இருந்த 9 அடி உயர  காம்பவுண்ட் சுவர் மீதும் மோதியது. சுவரில் 2 இடத்தில் சுமார் 1 அடி  உயரத்துக்கு காம்பவுண்ட் சுவர் உடைந்தது. ஆனாலும் விமானத்தின் பின்  சக்கரங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. சில பாகங்கள் மட்டும் உடைந்து  கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன்  மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று சேதமடைந்த டவர்  மற்றும் காம்பவுண்ட் சுவரை பார்வையிட்டனர்.

 இதற்கிடையில், திருச்சி விமான  நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தின்  பைலட்டை தொடர்பு கொண்ட போது பைலட், `விமானத்தில் எந்த பிரச்னையும்  இல்லை. நாங்கள் துபாய்க்கு சென்று விடுகிறோம்’ என தெரிவித்தார்.

பின்னர் திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில்  இருந்து மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு துபாய்  செல்லும் விமானத்தை மும்பையில் அவசர வழியில் தரையிறக்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. எனினும், திருச்சி அதிகாரிகள் மீண்டும் பைலட்டை தொடர்பு கொண்டு  விமானத்தை மும்பையில் தரை இறக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

அப்போது விமானம் துபாய் கடல்  பகுதியில் பறந்து கொண்டிருந்தது. இந்த விமானம் வழக்கமாக காலை 5.15 மணிக்கு  துபாயில் தரை இறங்க வேண்டும். அடுத்த 45 நிமிடத்தில் துபாயில் தரை இறங்க  இருந்த நிலையில் உத்தரவு வந்ததால் பைலட், விமானத்தை மும்பைக்கு  திருப்பினார்.

 பாதுகாப்பாக மும்பையில் விமானம் தரை இறங்கியது. அதில் இருந்த பயணிகள் 136 பேரும், பத்திரமாக கீழே இறங்கினர்.  இதன்பிறகே மும்பை மற்றும் திருச்சி விமான நிலைய அதிகாரிகள்  நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். விமானம் பத்திரமாக தரை இறங்கியதால் சுமார் 5  மணி நேரம் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது. 

இதுகுறித்து திருச்சி  விமான நிலைய இயக்குனர் குணசேகரனிடம் கேட்டபோது, `விமானம் ஐஎல்எஸ் டவரிலும்,  சுவரிலும் மோதி சென்றுள்ளது. டவரில் மோதியவுடன் கட்டுப்பாட்டு அறைக்கு  அலாரம் சத்தம் கேட்டது. உடனே பைலட்டை அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.  ஆனால் பைலட், விமானம் பாதுகாப்பாக இருப்பதாக கூறி விட்டார். இதன்பிறகு  மும்பையில் அவசர வழியில் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.   விமானமும் பத்திரமாக தரையிறங்கி விட்டது. 

நடந்த சம்பவம் குறித்து  விசாரணை நடத்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பொது இயக்குனரகம் (டி.சி.ஜி.ஏ.)  உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில் விமானி மீது தவறு  இருப்பது தெரிய வந்தால், அவரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

சம்பவம் பற்றி அறிவதற்கு, விமானநிலைய ஆணைக்குழும உயர் அதிகாரிகள் சென்னையில் இருந்து திருச்சிக்கு  வந்தனர். விமான நிலைய இயக்குநர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதையடுத்து விபத்து நடந்த டவர், சுற்றுச்சுவர் பகுதியில் ஆய்வு நடத்தின…

by Mani Bharathi   on 13 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.