LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருச்சி மாவட்டம் முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை- தமிழக அரசு அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

கர்நாடகாவில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்ததால்  அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. 

உபரிநீர்  அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது. இதேபோல் கேரளாவிலும், தமிழகத்தின் நீலகிரியிலும் பெய்த மழையால் பவானி சாகர் அணை நிரம்பி அமராவதி அணை, மாயனூர்  தடுப்பணை வழியாக காவிரியில் கலந்தது.

இதனால் காவிரியில் வினாடிக்கு சுமார் 3 லட்சம் கனஅடி வீதம் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. முக்கொம்பில் இருந்து 50ஆயிரம் கனஅடி காவிரியிலும், 2.5 லட்சம் கனஅடி நீர் கொள்ளிடத்திலும் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி, 180 ஆண்டுகள் பழமையான முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் 45 மதகுகளில் 9 மதகுகள் திடீரென  உடைந்தது. மதகுகள் பொருத்தப்பட்டிருந்த தூண்களும் சரிந்தன. 

இதனால் கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலணையில் 9 மதகுகள் உடைந்ததால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு  அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், திருச்சி மாவட்டம் முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் 55 கதவணைகளுடன் புதிய அணை கட்டப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் புதிய  அணை மூலம் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்கள் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய அணையால் 12 லட்சத்து 58 ஆயிரத்து 460 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று  குறிப்பிடப்பட்டு உள்ளது. அணையில் இருந்து 2 லட்சத்து 83 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற முடியும் என்றும் அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

by Mani Bharathi   on 18 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.